ADVERTISEMENT

ஷூட்டிங்கின் இடையே குடும்பத்துடன் பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ்!

11:40 AM Dec 30, 2019 | santhoshkumar

அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் , துரை செந்தில்குமார் இயக்கத்தில் ‘பட்டாஸ்’ என்றொரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதன்பின் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் ஷூட்டிங் அசுரன் ஷூட்டிங் முடிந்தவுடன் லண்டனில் அறுபது நாட்கள் வரை நடைபெற்றது. இந்த முதல் கட்ட ஷூட்டிங் முடிவடைந்ததும். பட்டாஸ் படத்திற்கான மீதமுள்ள காட்சிகளில் நடித்து கொடுத்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதன்பின் தான் மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கார்த்திக் சுப்புராஜின் படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் எடுக்கப்பட்டது. அதில் நடிப்பதற்காக தன்னுடைய தோற்றத்தை மாற்றிக்கொண்டிருந்தார் தனுஷ். இந்த படபிடிப்பின் புகைப்படங்கள், வீடியோக்கள் என்று பல விஷயங்கள் லீக்காகின. இதில் தனுஷ் கதாபாத்திரத்தின் பெயர் சுருளி என்றும், அதுதான் படத்தின் டைட்டிலாக இருக்கும் என்றும்ச் சொல்லப்பட்டது. இந்நிலையில் படக்குழு அதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

தற்போது இந்த படபிடிப்பு பழனி அருகே உள்ள கோம்பை பட்டியில் நடந்து வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் கடைசி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதனால் நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா மற்றும் இரு மகன்களுடன் பழனி முருகன் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

ரோப்கார் மூலம் மலைக்கோவில் சென்று, சாமி தரிசனம் செய்தார். இதற்கிடையே தனுஷ் வந்ததை அடுத்து கோவிலில் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். பின்னர் அவர் ரோப்கார் வழியே அடிவாரம் சென்று பழனி கோம்பைபட்டிக்கு சென்றார். இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜூம் பழனி முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.

நேற்றுடன் இந்த படத்தின் படபிடிப்பும் முடிந்துவிட்டதாக தனுஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து பணிபுரிந்தது மிகவும் சூப்பராக இருந்தது. இவ்வளவு வேகமாக எந்த படத்திலும் நான் பணிபுரிந்தது இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT