ADVERTISEMENT

ஐபிஎல் இறுதி போட்டியில் ஏ.ஆர் ரஹ்மான் !

03:48 PM May 28, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஐபிஎல் 2022, மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் மற்றும் பிளே ஆஃப் போட்டிகள் முடிந்து இறுதி போட்டி நாளை (29.05.2022) பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் நடக்கவுள்ள இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றனர். மேலும் அமீர் கான், கரீனா கபூர் நடிப்பில் உருவாகியுள்ள 'லால் சிங் சத்தா' படத்தின் ட்ரைலர் இந்நிகழ்வின் போது வெளியிடப்படவுள்ளது.

ஐபிஎல் 2022 இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்பு ஏ.ஆர் ரஹ்மான் தலைமையில் கலை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என முன்னரே அறிவிப்பு வந்தது. இது தொடர்பாக ஏ.ஆர் ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் 80 வருடமாக பயணிக்கும் இந்திய கிரிக்கெட்டை பெருமைப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி இருக்கும் என தெரிவித்துள்ளார். இந்த போட்டியில் கலை நிகழ்ச்சிகள் மட்டும் 45 நிமிடத்திற்கும் மேலாக இருக்கும் என கூறப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT