AR Rahman answerd to Kasthuri tweet

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்தனது இசையால் இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களுக்குஇசையமைத்துள்ளார். இருப்பினும்மொழிப்பற்றுஎன்று வந்துவிட்டால் தாய்மொழியான தமிழின் பக்கமே நிற்பார். அதனால் தமிழர்கள் மீதுஇந்தி மொழி திணிக்கப்படும் போதெல்லாம் தனது கருத்துகளைசத்தமே இல்லாமல்சற்று காட்டமாகவேவெளிப்படுத்தி வருகிறார்.

Advertisment

கடந்த காலங்களில் அவர் பேசிய மேடைகளில் எனக்கு இந்தி தெரியாது.தயவு செய்து தமிழில் பேசுங்கள் என்று கூறியதோடு, பிரபல விருதுவிழாவில் கூட தமிழிலேயே பேசி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருப்பார். அந்த வகையில் சமீபத்திய தமிழ் விருது விழாவில் அவரின் மனைவியிடம் இந்தியில் பேச வேண்டாம் என்று கூறியிருந்தார். பின்பு அவரது மனைவி, மன்னித்துவிடுங்கள். எனக்குதமிழ் சரளமாக பேசதெரியாது என்று ஆங்கிலத்தில் பேசுவார். இது தொடர்பானவீடியோ சமூகவலைதளங்களில்வைரலானது.

Advertisment

இந்த நிலையில், இதனைக்குறிப்பிட்டு நடிகை கஸ்தூரி, “என்னது ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் மனைவிக்குதமிழ்வராதா?அவங்கதாய்மொழி என்ன? வீட்டுல, குடும்பத்தில என்னபேசுவாங்க?” எனதனதுட்விட்டர்பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான், “காதலுக்கு மரியாதை” என்று ஒற்றை வரியில் பதிலளித்துள்ளார்.