சாமி 2 (படங்கள்)
சார்ந்த செய்திகள்
Next Story
விக்ரம் பட விழாவில் அன்புச்செழியன்!
தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஷிபு தமீன் தயாரித்திருக்கும் சாமி ஸ்கொயர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகர்கள் டெல்லி கணேஷ், பிரபு, இமான் அண்ணாச்சி, ஓ.ஏ.கே.சுந்தர், சூரி, ரமேஷ்கண்ணா, நடிகைகள் சுமித்ரா, உமா ரியாஸ், ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ், நடன இயக்குநர் பாபா பாஸ்கர், சண்டைப்பயிற்சி இயக்குநர் சில்வா, பாடலாசிரியர் விவேகா, இவர்களுடன் இயக்குநர் ஹரி, நடிகர் விக்ரம், தயாரிப்பாளர் ஷிபு தமீன், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும் யாரும் எதிர்பாராத வகையில் அந்த விழாவில் ஃபைனான்சியர் அன்புச்செழியன் கலந்துகொண்டார். சசிகுமாரின் உறவினரும், தயாரிப்பாளருமான அசோக்குமாரின் மரணத்திற்கு காரணமாக சொல்லப்பட்ட ஃபைனான்சியர் அன்புச்செழியன் அந்த வழக்கில் தேடப்பட்ட பொழுதே முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் கலந்துகொண்ட அமைச்சர் செல்லூர் ராஜுவின் இல்ல விழாவில் கலந்துகொண்டு ஷாக் கொடுத்தார்.
முதல்வருடன் தனியறையில் பேசியதாகவும் சர்ச்சை எழுந்தது. அதன்பின் நீண்ட நாட்களாக வெளியே தலைகாட்டாமல் இருந்த பைனான்சியர் அன்புச்செழியன் இவ்விழாவில் கலந்துகொண்டது வந்திருந்த அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அசோக்குமார் மரணத்தின் போது இவரை எதிர்த்து விஷால், ஞானவேல்ராஜா, இயக்குனர் சுசீந்திரன் உள்ளிட்ட பலரும் குரல் கொடுத்தனர். அதே நேரம் இவருக்கு ஆதரவாகவும் சுந்தர்.சி, விஜய் ஆண்டனி போன்றோரின் குரலும் எழுந்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்ற அன்புச்செழியன், இன்னும் வழக்கிலிருந்து வெளிவரவில்லை. ஆனாலும் தற்போது படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் 90% படங்களுக்கு இவர்தான் பைனான்சியர் என்பது குறிப்பிடத்தக்கது. கந்துவட்டி என்ற மிக மோசமான பிரச்சனையில் ஒரு மரணத்துக்குக் காரணமாக சொல்லப்படும் ஒருவர் மீது பெரிதாக எந்த நடவடிக்கையும் இல்லாதது வியப்பளிக்கிறது.
Next Story
'பிக்பாஸ்-ல் இவருக்குத்தான் நான் ஓட்டு போட போகிறேன்' - பிரபு
தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஷிபு தமீன் தயாரித்திருக்கும் சாமி ஸ்கொயர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகர்கள் டெல்லி கணேஷ், பிரபு, இமான் அண்ணாச்சி, ஓ ஏ கே சுந்தர், சூரி, ரமேஷ்கண்ணா, நடிகைகள் சுமித்ரா, உமா ரியாஸ், ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ், நடன இயக்குநர் பாபா பாஸ்கர், சண்டை பயிற்சி இயக்குநர் சில்வா, பாடலாசிரியர் விவேகா இவர்களுடன் இயக்குநர் ஹரி, சீயான் விக்ரம், தயாரிப்பாளர் ஷிபு தமீன், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், பைனான்சியர் அன்புசெழியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது விழாவில்
நடிகர் பிரபு பேசுகையில்... "அப்பாவுடன் சிறிய வயதில் இருந்தே நான் பயணித்திருக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் வித்தியாசமாக நடிக்கவேண்டும் என்ற தேடல் இருப்பதை கவனித்திருக்கிறேன். உடலை ஏற்றுவார். இறக்குவார். குரலை மாற்றுவார். அதே போல் கமல்ஹாசனிடத்திலும் அந்த ஆர்வம் இருப்பதை கண்கூடாக கண்டிருக்கிறேன். அந்த பாதையில் என்னுடைய அருமைத்தம்பி சீயான் விக்ரமும் பயணிக்கிறார். அவருடன் ராவணா, கந்தசாமி அதைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தில் நடித்திருக்கிறேன். அவருடன் நடிக்கும் போது நான் உணர்ந்த ஒரு விசயம் என்னவெனில், அவர் நம் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம்." என்று கூறிய பின்பு உமா ரியாசை பார்த்த அவர்.. " உங்கள் அம்மாவை எனக்கு நன்றாக தெரியும். அவரின் தீவிர ரசிகன் நான். உங்கள் மகன் ஷாரிக்கிற்கு பிக்பாஸ்-ல் நான் ஓட்டு போட போகிறேன்" என்றார்.