2021ஆம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலகக்கோப்பை தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்த தொடரில் நேற்று (05.11.2021) நல்ல ரன் ரேட்டுடன் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இறங்கிய இந்திய அணி, ஸ்காட்லாந்து அணியை எளிதாக வீழ்த்தி வெற்றிபெற்றது.
இருப்பினும், நாளை நடைபெறும் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தினால் மட்டுமே இந்திய அணி அடுத்த சுற்றுக்குள் நுழையலாம் என்ற நிலை நீடிக்கிறது. இந்தநிலையில், நேற்றைய போட்டிக்குப் பிறகான செய்தியாளர் சந்திப்பின்போது, இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜாவிடம், நியூசிலாந்தை ஆப்கானிஸ்தான் வீழ்த்தவில்லை என்றால் என்ன ஆகும் என கேள்வி எழுப்பப்பட்டது.