ADVERTISEMENT

15 ரன் வித்தியாசத்தில் வெற்றி; 10வது முறையாக இறுதிப்போட்டிக்கு செல்லும் சிஎஸ்கே

11:43 PM May 23, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

2023 ஐபிஎல் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்னை அணி முன்னேறியுள்ளது.

16 ஆவது ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் 4 அணிகள் ப்ளே ஆஃப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளன. அதன்படி குஜராத், சென்னை, லக்னோ, மும்பை என 4 அணிகள் ப்ளே ஆஃப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளன.

சென்னை சேப்பாக்கத்தில் இன்று தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்ய, சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்தது. 20 ஓவரில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 157 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் வென்றதினால் சென்னை சூப்பர் கிங்ஸ் 10 ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. சென்னை அணி வெற்றியைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடித்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதுவரை நான்கு முறை ஐபிஎல் கோப்பைகளை வென்ற சென்னை அணி இந்த முறையும் கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT