Skip to main content

‘தல தோனியை பார்த்தால் போதும்’ நள்ளிரவில் இருந்து காத்திருக்கும் இளைஞர்கள்

Published on 03/05/2023 | Edited on 03/05/2023

 

 youths who have been waiting since midnight at chennai chepauk

 

16வது ஐ.பி.எல். டி.20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்துவருகின்றன. இந்த ஐ.பி.எல். போட்டியில் 10 அணிகள் மோதுகின்றன. தற்போதுவரை நடந்துள்ள ஐ.பி.எல். போட்டியில் குஜராத் அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் 10 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், 10 புள்ளிகளுடன் லக்னோ அணி மூன்றாவது இடத்திலும், 10 புள்ளிகளுடன் சென்னை அணி நான்காவது இடத்திலும் உள்ளன. சென்னையுடன் வரும் 6ம் தேதி மோதும் மும்பை அணி 8 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. 

 

இந்நிலையில், சென்னை - மும்பை அணிகள் வரும் மே 6ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கான நேரடி டிக்கெட் விற்பனை 3ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று இரவு முதல் இளைஞர்கள் ஏராளமானோர் டிக்கெட் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். 

 

சென்னை சேப்பாக்கம் மைதானம் அண்மையில் புனரமைக்கப்பட்ட பிறகு மொத்தம் 38 ஆயிரம் ரசிகர்கள் வரை நேரடியாக போட்டிகளைக் காண முடியும் என்ற நிலையில், 22,000 டிக்கெட்டுகள் மட்டுமே ஆன்லைன் மற்றும் நேரடி விற்பனைக்கு விடப்பட்டுள்ளன. 1500 ரூபாய் டிக்கெட்கள் நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது. ரூ. 2000 மற்றும் ரூ. 2500 டிக்கெட்கள் நேரடியாகவும் ஆன்லைனிலும் விற்கப்படுகிறது. அதேபோல், ரூ. 3000 மற்றும் ரூ. 5000 மதிப்புள்ள டிக்கெட்கள் ஆன்லைனில் விற்கப்பட்டுவருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் அதிக அளவிலான இரசிகர்கள் கூடியுள்ளதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

 

இதில் டிக்கெட் வாங்கவந்த இரசிகர்கள் சிலர் ‘தோனியை நேரில் பார்க்க எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் காத்திருப்போம். தல தோனி இந்த தொடர்தான் கடைசியாக விளையாடப்போகிறார். அவரை கடைசியாக மைதானத்தில் ஒரு முறை பார்த்தால் போதும். நீண்ட நேரமாக நின்றுகொண்டிருக்கிறோம்; டிக்கெட் கிடைக்குமா எனத் தெரியவில்லை’ என்று தெரிவித்தனர். 

 

 

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.