ADVERTISEMENT

கொந்தளித்த தோனி! முடிவை மாற்றிய நடுவர்!

11:51 AM Oct 14, 2020 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

தோனியின் எதிர்வினையையடுத்து, நடுவர் முடிவை மாற்றிய ருசிகர சம்பவம் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது நடந்துள்ளது.

13-வது ஐ.பி.எல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 29-வது லீக் போட்டியில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில், சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. நேற்றைய போட்டியில் கள நடுவராக பால் ரீஃபெல் செயல்பட்டார். ஹைதரபாத் அணிக்கு எதிரான 19-வது ஓவரை சென்னை அணி வீரர் தாக்கூர் வீச, அதை ரஷீத் கான் எதிர்கொண்டார். அந்த ஓவரின் இரண்டாம் பந்தை நடுவர் 'வைடு' என அறிவிக்க முயன்றார். உடனே தோனி, நடுவரின் முடிவுக்கு எதிராக தனது அதிருப்தியை வெளிப்படுத்த, 'வைடு' அறிவிக்க உயர்த்திய கையை மெதுவாக கீழே இறக்கினார். தற்போது இந்தக் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT