ADVERTISEMENT

உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்த இரு அணிகள் தான் மோதும்..! சுந்தர் பிச்சை கணிப்பு...

04:12 PM Jun 13, 2019 | kirubahar@nakk…

இங்கிலாந்து நாட்டில் நடந்து வரும் உலகக்கோப்பை போட்டிகள் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மழை காரணமாக பல ஆட்டங்கள் தடைபட்டாலும் இதுவரையிலான இந்திய அணியின் ஆட்டம் இந்திய ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்நிலையில் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடும் அணிகள் எவை என்பதை கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கணித்துள்ளார்.

வாஷிங்டன்னில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சுந்தர் பிச்சையிடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது, அதற்கு பதிலளித்த அவர், இம்முறை இந்தியாவும், இங்கிலாந்தும் இறுதிப்போட்டியில் மோதும் என நான் எதிர்பார்க்கிறேன்.அதே நேரம் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளும் சிறப்பாக விளையாடுகின்றன என தெரிவித்தார். தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சையின் இந்த பதிலை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT