இங்கிலாந்தில் வரும் மே மாதம் இறுதியில் நடைபெற உள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை உலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது. இதில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர ஷேவாக், தான் தேர்வு செய்தால் இது தான் தனது அணி என்று ஒரு பட்டியலை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி 2015 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் விளையாடிய 7 பேரை மறுபடியும் தேர்வு செய்துள்ளார். 2015 உலக கோப்பையில் விளையாடிய விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான், தோனி, ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ஷமி ஆகியோரை மறுபடியும் தேர்வு செய்துள்ளார். மேலும் கேதர் ஜாதவ், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ்,ஜாகல் ஆகியோடை தேர்வு செய்துள்ளார்.
Show comments