8 ஆவது டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாம் பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்காவுடனான போட்டியில் மட்டும் தோல்வி அடைந்தது.
இரண்டாம் பிரிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலும் உள்ளது. இரண்டு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால் உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
வரும் 6 ஆம் தேதி இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் இடையிலான போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றால் ஜிம்பாப்வே நாட்டுக்காரரை திருமணம் செய்து கொள்வதாக பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகை செஹர் ஷின்வாரி தெரிவித்துள்ளார்.
இவர் தொடர்ச்சியாக இந்திய அணியினைக் குறித்து சர்ச்சையான கருத்துக்களைப் பதிவிடுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.