உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 14 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 82 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 140-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 5000க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
ADVERTISEMENT
இதன் ஒருபகுதியாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக இயல்பாக ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகள் எப்போது நடைபெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்ட இந்த போட்டி மறுபடியும் எப்போது தொடங்கும் என்று தெரியாமல் உள்ளது. இந்நிலையில், அக்டோபர் மாதத்திற்குள் நாடு இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டால் ஐ.பி.எல். போட்டி கண்டிப்பாக நடைபெறும் என்று வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெக்ரா தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments