ADVERTISEMENT

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இருந்து பெங்களூரு வெளியேறியது...

09:22 AM Nov 07, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் வெளியேற்றுதல் சுற்றில் தோல்வியடைந்த ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடரில் இருந்து வெளியேறியது. அபுதாபியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது.

முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். பின்னர் 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

ஃபைனலில் மும்பை அணியை எதிர்கொள்ளப்போவது யார்?

டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நாளை நடக்கும் இரண்டாவது தகுதி போட்டியில் வெல்லும் அணி ஃபைனலில் மும்பை இண்டியன்ஸ் அணியை சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT