ADVERTISEMENT

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி!

11:53 PM Oct 04, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

ADVERTISEMENT

துபாயில் நடைபெற்ற போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை விக்கெட் இழப்பின்றி வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. முதலில் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது.

அதைத் தொடர்ந்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் ஷேன் வாட்சன் 83 ரன்களும், டூபிளசிஸ் 87 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர். அதேபோல், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தரப்பில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல்- 63, பூரன்- 33, மன்தீப் சிங்- 27, மயங்க் அகர்வால்- 26 ரன்கள் எடுத்தனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT