துபாயில் நடைபெற்ற போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை விக்கெட் இழப்பின்றி வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. முதலில் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் ஷேன் வாட்சன் 83 ரன்களும், டூபிளசிஸ் 87 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர். அதேபோல், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தரப்பில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல்- 63, பூரன்- 33, மன்தீப் சிங்- 27, மயங்க் அகர்வால்- 26 ரன்கள் எடுத்தனர்.