ADVERTISEMENT

ஆல்ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு!

10:59 AM Aug 30, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி, முதல் தர மற்றும் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 37 வயதான பின்னி இந்தியாவிற்காக 6 டெஸ்ட், 14 ஒருநாள் போட்டிகள், 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஸ்டூவர்ட் பின்னி, கடந்த 2014 ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராக வெறும் நான்கு ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதுவே இந்தியப் பந்துவீச்சாளர் ஒருவரின் சிறந்த பந்துவீச்சு செயல்பாடாக இன்று வரை நீடிக்கிறது.

ஓய்வு முடிவினை வெளியிட்டுள்ள ஸ்டூவர்ட் பின்னி, "சர்வதேச அளவில் எனது நாட்டிற்காக விளையாடியது மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமையும் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT