ADVERTISEMENT

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!

02:21 PM Oct 06, 2019 | santhoshb@nakk…

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

ADVERTISEMENT

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 395 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்கா அணி 191 ரன்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 502 ரன்கள் எடுத்தது தென்ஆப்பிரிக்கா அணி 431 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்சில் 323 ரன்களுக்கு டிக்ளேர் செய்த இந்திய அணி 395 ரன்களை இலக்காக நிர்ணயித்தது

ADVERTISEMENT


இந்தப் போட்டியில் இந்திய அணியின் அபாரமாக பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அதேபோல் ஜடேஜா 4 விக்கெட்களையும், அஸ்வின் 1 விக்கெட்டையும் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் மூன்று டெஸ்ட் தொடர் கொண்ட போட்டியில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.


இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் அக்டோபர் 10- ஆம் தேதி தொடங்குகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT