t20 cricket match series india win

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

Advertisment

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து, 186 ரன்கள் எடுத்தால், வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து, 177 ரன்களை மட்டுமே எடுத்துத் தோல்வி அடைந்தது.

Advertisment

t20 cricket match series india win

இந்திய அணித் தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 57, ரிஷப் பந்த் 30, ஸ்ரேயாஸ் ஐயர் 37 ரன்களை எடுத்தனர். அதேபோல், இங்கிலாந்து அணித் தரப்பில் அதிகபட்சமாக பென்ஸ்டோக்ஸ் 46, ஜாசன் ராய் 40 ரன்களை எடுத்தனர்.

5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை '2- க்கு 2' எனும்வெற்றிக் கணக்கில் சமன் செய்தது இந்திய அணி. டி20 தொடரை வெல்வதற்கான இறுதிப் போட்டி மார்ச்- 20- ஆம் தேதி நடைபெறுகிறது.