ADVERTISEMENT

இந்தியாவிற்கெதிரான மூன்றாவது டெஸ்ட்: ஸ்மித்தால் 300 ரன்களை கடந்த ஆஸ்திரேலியா!

09:54 AM Jan 08, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று (07/01/2021) தொடங்கியது. மழையால் பாதிக்கப்பட்ட இந்த போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் விரைவில் ஆட்டமிழந்தார். இருப்பினும் அறிமுக போட்டியில் களமிறங்கிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் புகோவ்ஸ்கி அரைசதமடித்து, 62 ரன்களில் சைனி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஸ்மித் மற்றும் லபூஷனே, நிலைத்து நின்று ஆடத் தொடங்கினர். சிறப்பாக ஆடிய லபூஷனே அரை சதமடித்தார். முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலிய அணி 166 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இரண்டாம் நாளான இன்று (08/01/2021) லாபூஷனே 91 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மறுபுறத்தில் சிறப்பாக ஆடிய ஸ்மித், 131 எடுத்த நிலையில் ஜடேஜாவால் ரன்அவுட் செய்யப்பட்டார். இதனையடுத்து ஆஸ்திரேலியா அணி, 338 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையம் இழந்தது.

இந்திய அணி தரப்பில், ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா, சைனி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சிராஜ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT