ADVERTISEMENT
ADVERTISEMENT
மீண்டும் சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக தோனி பொறுப்பேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே அணி குறிப்பிடத்தகுந்த வெற்றிகளை பெறாத நிலையில் அணியின் தற்போதைய கேப்டன் ரவீந்திர ஜடேஜா கேப்டன் பதவியை தோனிக்கு வழங்க முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரு வீரராக சிறப்பான பங்களிப்பை வழங்கும் பொருட்டு இம்முடிவை ஜடேஜா எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பை மீண்டும் தோனியே ஏற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மீண்டும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி பொறுப்பேற்கிறார் என்ற செய்தி அவருடைய ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Show comments