ADVERTISEMENT

பறிபோன கேன் வில்லியம்சனின் கேப்டன் பதவி... வார்னரின் வருகையால் மாற்றம் செய்த சன் ரைசர்ஸ் அணி...

10:46 AM Feb 28, 2020 | kirubahar@nakk…

2020 ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மும்பையில் மார்ச் 29-ந் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் ஹைதராபாத் அணிக்கு புதிய கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

2018-ம் ஆண்டு மார்ச் மாதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய வார்னருக்கு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒரு ஆண்டு கிரிக்கெட் விளையாட தடை விதித்தது. இதனால் அவர் 2018 ஆம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. இதனையடுத்து ஹைதராபாத் அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டார்.

அதன்பின் 2019 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் டேவிட் வார்னர் பங்கேற்றாலும் அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்று ஐபிஎல் தொடர்களில் ஹைதராபாத் அணியின் கேப்டனாக இருந்துவந்த வார்னர் தற்போது மீண்டும் அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT