Skip to main content

ரிஷப் பண்ட் விவகாரம்! ரிக்கி பாண்டிங்கிற்கு கோரிக்கை வைக்கும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்!

Published on 09/11/2020 | Edited on 10/11/2020

 

Rishabh Pant

 

அமீரகத்தில் நடைபெற்று வரும் 13-ஆவது ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டியானது, மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே இன்று நடைபெறுகிறது. ஐ.பி.எல் வரலாற்றில் டெல்லி அணி இறுதிப் போட்டிக்குள் நுழைவது இதுவே முதல்முறையாகும்.

 

பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சம பலத்துடன் திகழும் டெல்லி அணி மீது தொடக்கம் முதலே அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அதே போல டெல்லி அணி வீரர் ரிஷப் பண்ட் மீதும் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. 13 போட்டிகளில் களமிறங்கியுள்ள ரிஷப் பண்ட், 287 ரன்கள் மட்டுமே குவித்து தன் மீதான எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறினார். இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான பிராட் ஹாக், ரிஷப் பண்ட் தொடர்பாக டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கிற்கு கோரிக்கை வைத்துள்ளார்.

 

அதில் அவர், "ரிக்கி பாண்டிங் நிலைத்து நின்று ஆடுமாறு ரிஷப் பண்ட்டிடம் கூறிவிட்டார் என்று நினைக்கிறேன். அதிக நாட்-அவுட் உடைய வீரராக இருக்க வேண்டும் என்று ரிக்கி பாண்டிங் விரும்புகிறார். பண்ட் சுதந்திரமாக செயல்படக் கூடியவர். களத்தில் இறங்கிவிட்டால், அதிரடியாக விளையாடி ரசிகர்களுக்கு வேடிக்கை காட்டக் கூடியவர். அவரை உங்களால் பிடித்து வைக்க முடியாது. கடந்த சில தொடர்களில், ரன் சேர்ப்பு வேக விகிதம் 150-க்கும் மேலே வைத்திருக்கிறார். அவருக்கு விலக்குக் கொடுங்கள். அவர் விக்கெட்டை இழக்கட்டும். அதிரடியாக விளையாடி ரசிகர்களைக் குஷிப்படுத்தட்டும்.  ரிஷப் பண்ட்டின் சிறந்த ஆட்டத்தை நாங்கள் பார்க்க வேண்டும்" எனக் கூறினார்.  

 

 

 

Next Story

தடைகளைத் தாண்டும் ரிஷப் பண்ட்; ரசிகர்கள் மகிழ்ச்சி!

Published on 14/06/2023 | Edited on 14/06/2023

 

cricketer rishabh pant instagram viral video after car incident treatment 

 

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்த கார் விபத்தில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பல்வேறு அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டு தற்போது உடல்நிலை தேறிவரும் நிலையில் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

 

இந்நிலையில் ரிஷப் பண்ட் வெளியிட்டுள்ள வீடியோவில், முதலில் மாடிப்படிக்கட்டில் ஏறும்போது கடும் சிரமத்திற்கு இடையில் படிக்கட்டின் கைப்பிடி உதவியுடன் ரிஷப் பண்ட் நடந்து வருகிறார். அதனைத் தொடர்ந்து தற்போது சற்று சகஜமாக நடந்து வருகிறார். அந்த வீடியோவில், 'மோசமாக இல்லை. சாதாரண விஷயங்கள் கூட சில நேரங்களில் கடினமாக இருக்கும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இதையடுத்து அவரது ரசிகர்கள் ரிஷப் முழுவதும் குணமடையவும், விரைவில் கிரிக்கெட் மைதானத்திற்கு வாருங்கள் எனவும் கமெண்ட் செய்து உற்சாகம் அளித்து வருகிறார்கள். ரிஷப் பண்ட் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 

 

Next Story

”இந்த மூவரிலிருந்துதான் இந்தியாவின் அடுத்த கேப்டன்” - தேர்வுக் குழு தலைவர் அறிவிப்பு!

Published on 20/02/2022 | Edited on 21/02/2022

 

team india

 

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் விளையாடி வரும் இந்திய அணி, அடுத்தாக இலங்கையுடன் மூன்று இருபது ஒவர் போட்டிகளிலும், இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது. இந்தநிலையில் இத்தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

 

இதில் இந்திய டெஸ்ட் அணியிலிருந்து ரஹானே, புஜாரா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். ரோகித் சர்மா, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணி தேர்வுக் குழு தலைவர் சேத்தன் சர்மா, ரோகித் சர்மா தலைமையில் கே.எல் ராகுல், பும்ரா, ரிஷப் பந்த் ஆகியோர் அடுத்த கேப்டனாக உருவாக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக சேத்தன் சர்மா கூறுகையில், “தென்னாப்பிரிக்காவில் கே.எல் ராகுலை கேப்டனாக்கினோம். பும்ராவை  தென்னாப்பிரிக்காவிலும், இலங்கை தொடரிலும் துணை கேப்டனாக இருந்தார். மேற்கு இந்திய தீவு போட்டிகளில் ரிஷப் பந்த் துணை கேப்டனாக இருந்தார். இவர்கள் மூவரும் ரோகித்தின் கீழ் கேப்டனாக உருவாக்கப்பட இருக்கிறார்கள். அடுத்த கேப்டன் யார் என்று சொல்வது கடினம்தான். ஆனால் ஒருவர் கேப்டனாக உருவவார் என நம்புகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.