ADVERTISEMENT

அதிக சர்வதேச போட்டிகள்: விலகிய சி.எஸ்.கேவின் முக்கிய பந்துவீச்சாளர்!

10:07 AM Apr 01, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகம் முழுவதும் பிரபலமான ஐ.பி.எல் தொடர், வரும் ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது. இதனையடுத்து வீரர்கள், தங்கள் அணியோடு இணைந்து வருகின்றனர். மேலும் ஐபிஎல் அணிகள், தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜோஷ் ஹேசல்வுட், ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். அடுத்த 12 மாதங்களில் ஆஸ்திரேலியா அணி, அதிகமான சர்வதேச போட்டிகளில் விளையாட இருப்பதைக் குறிப்பிட்டுள்ள அவர், அதற்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் தயாராவதற்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.

ஏற்கனவே தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி, முதல் போட்டியில் ஆடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னொரு முக்கிய வேகப்பந்து வீச்சளார் அணியிலிருந்து விலகியுள்ளது சி.எஸ்.கே அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT