ADVERTISEMENT

கிறிஸ்ட்சர்ச் மசூதி துப்பாக்கி சூடு எதிரொலி: நியூஸிலாந்து கிரிக்கெட் போட்டி ரத்து...

10:26 AM Mar 15, 2019 | kirubahar@nakk…

நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதி ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த துப்பாக்கிசூட்டை அடுத்து உள்ளூர் போலீசார் மசூதியை சுற்றி வளைத்து பதிலடி கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் 27 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

துப்பாக்கி சூடு நடைபெற்ற நேரத்தில் நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் வீரர் தமிம் இக்பால் உட்பட மற்ற வீரர்களும் அந்த மசூதியில் இருந்ததாகவும், அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசாருக்கும், துப்பாக்கி ஏந்திய நபர்களுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்து வருவதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அப்பகுதியில் உள்ள பள்ளிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நியூஸிலாந்து, வங்கதேச அணிகளுக்கு இடையே நாளை நடைபெற இருந்த டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் துப்பாக்கிசூடு சம்பவம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT