ADVERTISEMENT

மாடிவீட்டு மகாலட்சுமி யார்?

04:39 PM Mar 18, 2019 | Anonymous (not verified)

சச்சிதானந்த பெருமாள்

ADVERTISEMENT

ஆதிசேஷனின் அம்சமான- வைணவம் போற்றும் ஸ்ரீராமானுஜரின் பொற்பாதம் பணிந்து வரைகிறேன். ஸ்ரீராமானுஜரின் ஜோதிட நூல் "பாவார்த்த ரத்னாகரம்' 383 சுலோகங்களினால் அருளப்பட்டது. இதன் சிலவரிகளில் வகுக்கப்பட்ட ராஜயோகநிலை தரும் கிரக அமைப்புகளை வாசகர்களுடன் சிறிது பகிர்ந்து கொள்கிறேன்.

ADVERTISEMENT

தந்தையால் வரும் அதிர்ஷ்டம் எப்படி? ஜாதகத்தில் சூரியன் 9, 12-ஆம் வீட்டுக்குரிய கிரகங்களுடன் கூடிநின்றாலும், குருவும் 12-ஆமதிபதியும் இணைந்து 12-ஆம் வீட்டிலேயே இருந்தாலும், உங்களின் தந்தை யோகவான். அவர் சேர்த்துவைத்த பணம், சொத்து ஆகியவற்றை அனுபவிக்கும் அதிர்ஷ்டசாலிலி நீங்களே. அயன சயன போஜன யோகம் உண்டு உங்களுக்கு. லக்னத்திற்கு 12-ல் வளர்சந்திரன் இருந்தால் தாயாரின் அனுகூலமும், லக்ன 12-ல் சுப சுக்கிரன் நின்றவருக்கு மனைவிவழி அதிர்ஷ்டம், காசு பணமும் சேரும். உங்களின் செவ்வாய் 12-ல் ஆட்சி, உச்சமானால் உடன் பிறப்புகளால் ஆனந்தம், அதிர்ஷ்டம் உண்டுதான்.

சுய சம்பாத்தியம் மற்றும் நல்ல துணைவர், நண்பர்கள்மூலம் அதிர்ஷ்டம் அடைய வேண்டுமானால் உங்களின் 7, 9-ஆம் அதிப திகள் பரிவர்த்தனை யோகத்தில் இருக்க வேண்டும். அதாவது பாக்கியாதிபதி (9) 7-ஆம் வீட்டிலும், களஸ்திர ஸ்தானாதிபதி 9-ஆம் வீட்டிலுமாக யோகம்தரும் விருத்திநிலை இது. 7, 9-ஆம் அதிபதி பரிவர்த்தனையால் நல்ல கல்வி, வேலை, துணைவர், பதவி, தூரதேசப்பயணம், தெய்வ கடாட்சம் ஆகிய அதிர்ஷ்டநிலைகளை, 7-ஆம் அதிபதியின் தசா காலங்களில் அனுபவிப்பீர்கள். குறிப்பாக விருச்சிகம் மற்றும் மகர லக்னப் பெண்களின் சுக்கிரன், சந்திரன் பரிவர்த்தனை மற்றும் சுக்கிரன், சூரியன் பரிவர்த்தனையானது மாடிவீட்டு மகாலட்சுமியாக புகழுடன் வாழவைக்கும்.

6-ஆம் வீட்டில் அமர்ந்த புதன் ஆட்சியானால், தன் தாயாருடன் பிறந்தோர் (தாய் மாமன்வழி) மூலமாக அதிர்ஷ்டம், பணம் சம்பாதிக்க முடியும். ஒருபடி மேலாக 2-க்குரிய கிரகமும் புதனும் கூடி 6-ல் அமர்ந்த யோகவான்களுக்கு மாமன் பிள்ளைகள் உங்களின் முன்னேற்றத்திற்குக் கைகொடுப்பார்கள். இதையே வள்ளுவர்கள் "ஆறும் புதனும் பலம்' என குறிக்கிறார்கள். உங்கள் கட்டங்களில் 4-க்கு 3-ஆமிடமான 6-ஆம் வீட்டைக் கொண்டு தாயாரின் உடன்பிறந்தவர் கதி நிர்ணயிக்கப்படுவது ஜோதிட அரிச்சுவடி. 6-ல் புதன் நன்னிலை பெற்றவரை எதிரிகள் வீழ்த்த இயலாது.

கோபம் மிகுந்தவரானபோதும் குணவதி களான விருச்சிகம் மற்றும் சிம்ம லக்னத் தாய்மார்களுக்கு, 5-க்குரியவரான குரு உச்சம் பெற்றால் உங்களின் பிள்ளைகள் பேர் சொல்லும் (ஊர் மெச்சும்) வாரிசுகளே.

குழந்தை பிறந்த நேரம் உங்களை கோபுர உச்சிக்கே புகழ், கௌரவத்துடன் உயர்த்தும். கிராமத்து அக்ரஹாரத்து ஓட்டு வீட்டை விட்டு, நாகரிகநகரில் பல அடுக்கு மாளிகை வீட்டில் பிள்ளைகளால் மகிழ்வாழ்வு அனுபவிப்பவர் ஏராளம்.

ராஜயோகம் என்பது செல்வாக்கும், சொல்வாக்கும், அதிகாரப் பதவி அந்தஸ்தாலும் அமைவது. உங்களின் தனாதிபதி- 2-ஆம் வீட்டிற்குரியவர் 2-ஆம் வீட்டிலேயும், பஞ்சமாதிபதி- பூர்வபுண்ணியாதிபதி 5-ஆம் வீட்டிலேயும் நின்றாலும், 10-ஆம் வீட்டில் 5-க்குரிய கிரகம் ஆட்சி, உச்சமானாலும் பணம், பதவி, செல்வாக்கிற்கு பஞ்சமில்லா அதிர்ஷ்டசாலிகளே நீங்கள். குறிப்பாக இந்த 2, 5, 10-ஆம் வீடுகளில் ஒருவரின் செவ்வாய், சந்திரன், சூரியன் ஆட்சி, உச்ச மானவர்கள் அரசியலில் புகழ், அதிகாரப் பதவி, வருமானத்திற்கு மிகையாக சொத்து சேர்க்கமுடிகிறது. விதிவிலக்காக 5-ல் பலமான குருவுடன் கேதுவும் கூடி நின்று, கேது தசாபுக்தி நடக்கையில் புகழ், கௌரவத்திற்குக் களங்கம், அவமானமும் தருவது வெற்றி ஜோதிடர் அனுபவம்.

முடிவுரையாக, கேரள ஜோதிடப்படி உங்களின் குரு, சுக்கிரன் மற்றும் சந்திரன், சனி இவர்கள் பஞ்சம பாக்கியஸ் தானமான 5-ஆம் வீடு, 9-ஆம் வீடுகளில் உச்ச கிரக வலுப்பெற்றவர்கள் மிக யோக வான்களே. எதிலும் வெற்றி! வாழ்வில் இன்பமே எந்நாளும். சிரமமே இல்லாமல் சொகுசு வாழ்வு அனுபவிப்பவர்கள் நீங்களாகவே இருப்பீர்கள். வாழிய நலம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT