Skip to main content

யார் காலில் விழுந்து வணங்கவேண்டும்?

Published on 30/04/2019 | Edited on 30/04/2019

பாஸ்கரா ஜோதிடர் எம். மாசிமலை
 

திம்ப சக்கர ஜாதகத்தை உலகுக்கு அருள்வித்த ஸ்ரீ ஸ்கந்த உபாசகர், ஜீவநாடி கலையரசு பி.டி. ஜெகதீஸ்வரன் ஐயா அவர்களுக்கு அடியேனுடைய பணிவான வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டு, அவரது சீரிய ஆசிர்வாதத்துடன் எனது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கிறேன்.

ஒருவருடைய திம்ப சக்கர ஜாதகத்தில் குரு எங்கிருக்கின்றதோ அந்த உறுப்பு சிறப்படைகிறது. உதாரணமாக குரு ஒருவருடைய முகத்தில் இருந்தால், அவரது முகத்தில் காலையில் கண் விழிப்பவர்களுக்கு அதிர்ஷ்டம்தான். "இன்று யார் முகத்தில் விழித்தேனோ, படாத பாடுபட வேண்டியதாகிறது' என்று புலம்ப வேண்டியதில்லை. 2-ல் குரு இருக்கப் பெற்றவர்கள் நாவில் குரு இருக்கப்பெற்று அருள்வாக்கு வழங்கும் நிலையில் உள்ளவர்கள். அருள்வாக்கு என்பது பேசத்தெரிந்த நாள் முதல் வருவதில்லை. அவர்களுக்கு நடக்கும் குரு தசையில்தான் அறிவுப்பூர்வமான பேச்சு, உபாசனைகள் செய்யக்கூடிய சக்தியைப் பெறுகிறார்கள்.

 

saibaba



குரு 2-ஆம் இடமாகிய முகத்தில் அமையப் பெற்றவர்களின் முகம் தெய்வீகக்களை பெற்றுவிடுகிறது. அத்தகைய உயர்ந்த அந்தஸ்தைக் கொடுப்பதற்கு அவர்களது ஜாதகத்தில் இடம் பெற்ற கிரகங்கள் அவருடைய வாழ்நாளில் ஒவ்வொரு நிலையிலும் காய்களை நகர்த்திக்கொண்டே இருக்கின்றன. ஒருநாள் இல்லாவிடில் ஒருநாள் அவர் உன்னதமான மகான் ஸ்தானத்தை அடைந்தே தீருவார்.

இரண்டாமிடமாகிய முகத்தில் சுபகிரகங்கள் இருப்பது மிகவும் சிறப்பாகும். குரு, சுக்கிரன், புதன், சந்திரன், சனி, செவ்வாய் ஆகிய கிரகங்கள் வளரும் பாவங்களுக்கு, அதிலும் நிலையானப் பாவத்துடன் யோகாதிபதியாக வந்து, திம்ப சக்கரத்தில் முகத்தைக் குறிக்கின்ற 2-ஆம் வீட்டில் அமர்ந்திருக்கும் ஜாதகங்கள் சுகவாழ்வையும் சௌகரியமான செல்வத்தையும் கொடுக்கும். அவ்வாறில்லாமல் நிலையற்ற பாவங்களைத் தொடர்புகொண்டு, யோகத்தைக் கெடுக்கக்கூடிய பாவங்களைத் தன்னகத்தே வைத்து அவயோகிகளாக வருகின்ற சனி, செவ்வாய், ராகு, கேது முகத்தில் அமைகின்ற ஜாதகங்கள் எவ்வளவு வருமானம் வந்தாலும் பற்றாக்குறை வாழ்வினை அனுபவிக்கப் பிறந்தவர்களே.

பொதுவாக, யாருடைய கால்களில் விழுந்து வணங்கவேண்டும் என்ற நியதி இருக்கிறது. கண்டவர்களின் காலிலில் விழுந்து வணங்குவது கூடாது. திம்ப சக்கர ஜாதகத்தில் பாதம் என்ற உறுப்பில் பாவகிரகங்கள் இருந்து, அத்தகையவர்களின் கால்களில் விழுந்து வணங்குவதால் பலன் ஒன்றும் கிடைக்காது. அதற்கு மாறாக அவருடைய பாவ கர்மாக்கள் விழுபவரிடம் வந்து சேர்ந்து கொள்ளும். பாதத்தில் சுபகிரகங்கள் இருக்கப்பெற்றவர்களில் காலிலில் விழுந்து வணங்குவது மிகவும் நன்மை பயக்கும். பாதத்தில் குரு இருக்கப் பெற்றவர்கள் அல்லது சந்திரன் நின்ற ராசிக்கு 12-ஆம் இடத்தில் குரு அமர்ந்த ஜாதகர்களின் பாதத்தில் விழுந்து வணங்கினால், அவர்கள் செய்த பூர்வபுண்ணியப்பலன்கள் முழுவதுமாகக் கிடைக்கப்பெற்று, முற்பிறவியில் செய்த பாவங்கள் தொலையும் சக்தியும் உண்டாகும். ஆதிசங்கரரின் பாதத்தில் குரு இருப்பதால் அவரின் காலில் விழுந்து வணங்கியவர்கள் மிக உன்னத நிலையை அடைந்தார்கள். இன்றளவும் அவரது பாதத்திற்கு பூஜை செய்து வழிபடுபவர்கள் ஏராளம். அவர்கள் சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர் என்பதும் கண்கூடான உண்மை.

நெற்றியில் குரு இருப்பவர்கள் இறைவனின் செய்திகளை நேரடியாகப் பெற்று மக்களுக்கு போதிக்கும் வலிலிமையையுடையவர்கள். பலருக்கும் குருவாக இருக்கும் தகுதியுடையவர்கள். புத்தம்புதிய கண்டுபிடிப்புகளை உலகுக்கு வெளிப்படுத்துபவர்கள் இவர்களே நீதிமான்கள், அறிவியல் விஞ்ஞானிகளாக வலம்வருவார்கள். மற்ற சுபகிரகங்களாகிய சந்திரன், சுக்கிரன், புதன் போன்ற கிரகங்கள் நெற்றி ஸ்தானத்தில் இருக்கப்பெற்றவர்களுக்கும் அந்தந்த கிரகங்களின் குணங்களுக்கேற்ப சிந்தனை பலம் அமைந்து அதற்குத் தக்கவாறு சாதனைகளைச் செய்ய வைக்கும். இவர்கள் எங்கு சென்றாலும் பெரிய அளவில் குருமார்களாகவோ, ராஜதந்திரிகளாகவோ உருவாவதால், அவர்களுக்கே உண்டான வெகுமதிகளும் மரியாதைகளும் கிடைக்கப் பெறுவார்கள்.

திம்ப சக்கர ஜாதகத்தில் சந்திரனுக்கு 2-ல் குரு இருப்பவர்களின் முகம் தெய்வீக முகமாகும். அவர்களது முகத்தில் விழித்தாலே தெய்வீக மாற்றம் உண்டாகும். இதற்கு சிறந்த உதாரணம் திருவண்ணாமலை ரமண மகரிஷி ஆவார். அவரது திம்ப சக்கர ஜாதகத்தில் 2-ஆம் இடத்தில் குரு பகவான் இருப்பதால், அவரது தரிசனத்திற்காக ஏங்கியவர்கள் ஏராளம். அவரது புகைப்படம் எங்குள்ளதோ அங்கு சுபிட்சத்திற்குப் பஞ்சமில்லை எனலாம். அவரது திம்ப சக்கர ஜாதகத்தை தரிசிப்போம் அன்பர்களே.

 

Next Story

மண வாழ்க்கை நிம்மதியாக இருக்க... - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 murugu-balamurugan-jothidam-3

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

திருமண வாழ்க்கை பற்றி பேசும்பொழுது பொதுவாக ஜோதிடம் என்பது ஒரு கடல். நிறைய கருத்துக்கள் இருந்தாலும் தற்காலத்திற்கு ஏற்றவாறு அன்றைய சூழ்நிலைக்கேற்றவாறு அனுபவ கருத்துதான் மிக மிக முக்கியம். புத்தகங்கள் இருந்தாலும் ஜோதிடர்கள் பல நேயர்களிடம் கேட்கக்கூடிய உரையாடலின் மூலமாக அவர்கள் சொல்லும் கருத்துக்கள் தான் மிக முக்கிய அனுபவம். அப்படி ஆண் பெண் ஜாதகம் எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால் மண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதிலும் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானம் திருமண வாழ்க்கை குறிக்கக்கூடிய ஸ்தானம் என்று சொல்லலாம். அது மட்டுமல்லாமல் இரண்டாம் வீடு என்பது குடும்ப ஒற்றுமையை குறிக்கக்கூடிய ஸ்தானம். எந்த ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்று நாலு ஏழு பத்தில் ஏழாம் அதிபதி அமைய பெறக்கூடிய ஜாதகமும் அதுபோல ஏழாம் அதிபதி ஒன்னு ஐந்து ஒன்பதில் அமையக்கூடிய ஜாதக நேயர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதுபோல இரண்டு ஏழு பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது ரொம்ப சிறப்பு. ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் என்பவர் களத்திரக்காரர் என்பர் அந்த களத்திரக்காரர் சுப கிரக சேர்க்கையோடு இருக்க வேண்டும்.

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் என்பவர் களத்திரக்காரர். அவர் சுப கிரக நட்சத்திரங்களோடு அமைவது, சுப கிரக சேர்க்கையோடு அமைவது மிக சிறப்பு. ஒரு ஆணின் ஜாதகத்தை எடுத்தாலும் சரி பெண்ணின் ஜாதகம் எடுத்தாலும் சரி இரண்டு, ஏழுக்கு அதிபதி பலமாக இருந்தால் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண காலத்தில் நடக்கக்கூடிய தசாபுத்திகள் சுபகிரக தசா புத்தியாக இருக்க வேண்டும். ஒரு நல்ல கிரகத்துடைய தசா புத்தி ஆக இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

நவக்கிரகங்களில் சுப கிரகம் என்பது குரு, சுக்கிரன் சுபசேர்க்கை பெற்ற புதன், வளர்பிறை சந்திரன் ஆகியவை சுப கிரகங்கள் ஆகும். அந்த சுப கிரகங்கள் ஏழில் அதிபதி அமைவதோ அல்லது ஏழாம் சேர்க்கை பெறுகிறதோ அடுத்த இரண்டாம் வீட்டிலோ அல்லது இரண்டாம் சேர்க்கை பெறுவதும், சுக்கிரன் எனும் சுப கிரக நட்சத்திரத்தில் அமைவதும், சுப கிரகங்களுடைய தசா புத்திகள் நடைபெற்றால் குறிப்பாக திருமண வயதில் அடுத்த 10 - 15 வருடங்களுக்கு நடக்கக்கூடிய அமைப்பு என்பது மன வாழ்க்கை ரீதியான பலனை ஏற்படுத்தக் கூடியது.

Next Story

உறவுகள் ஒற்றுமையாக இருக்க கிரகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
murugu-balamurugan-jothidam-2

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை நம்மோடு பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் பகிர்ந்து கொள்கிறார்.

ஜோதிடத்தில், குடும்ப ஒற்றுமை பற்றி அறிய இரண்டாம் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜோதிட ரீதியாக குடும்ப ஒற்றுமையை விளக்கக்கூடிய ஸ்தானமாக விளங்குவது ஜென்ம லக்னத்தில் இருந்து இரண்டாவது இடம். இது ஒரு பாலருக்கும் பொருந்தும்.  இரண்டாம் எண் என்பது குடும்ப ஒற்றுமை குறிப்பது.  இரண்டில் சுப கிரகங்கள் அமையப்பெற்றிருந்தால் அதாவது குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன், சுப சேர்க்கை பெற்றிருந்தால் குடும்ப ஒற்றுமை மிக மிக நன்றாக இருக்கும். 

அதுபோல குரு போன்ற கிரகங்கள் அதனுடைய பார்வை இரண்டாம் இடத்தில் இருந்தால் குடும்பத்தில் நல்லது.  பாவ கிரகங்கள் சனி ராகு கேதுவாக இருக்கிறார்கள். சூரியன், செவ்வாய் பாவகிரகங்கள் என்றால் அது பாதிப்பை கொடுப்பதில்லை. அதாவது  ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமைவது அவ்வளவு நன்றல்ல . லக்னத்தில் சந்திரனுக்கு இரண்டாம் வீட்டில் சனி, ராகு அமைவதும் அவ்வளவு நல்லஅமைப்பு என்று சொல்ல முடியாது. மேலும் அந்த சனியுடைய திசை இரண்டாம் வீட்டை நோக்கி வந்தாலும், இரண்டில் ராகு இருந்தாலும், ராகு திசை கடந்தாலும், அந்த ஜாதகருடைய குடும்பத்தில் ஒரு ஒற்றுமை குறைவு உண்டாக்கிவிடும். அதற்காக இரண்டாவது இடத்தில் சனி ராகு இருந்தால் முழுமையாக பாதிப்பென்று இல்லை. அதனுடைய திசை வரும் போது மட்டும் கொஞ்சம் பாதிப்பை உண்டாக்கலாம். குழந்தை பருவத்தில் இரண்டாம் வீட்டில் ராகு திசை நடக்கிறது என்றால் தந்தையோடு  இருக்க முடியாத நிலை உண்டாகும். ஒரு சில இடங்களில் தாத்தா பாட்டி அல்லது உறவினர்களுடன் வளரும் நிலை கூட உண்டாகிவிடும். 

அதேபோல இரண்டாம் வீட்டில்  சனி இருக்கும் பொழுது அந்த வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவது, வாக்குவாதங்கள் நடப்பது, நிம்மதி குறைவு, படிப்பு நிமித்தமாக அந்த ஜாதகர் வெளியிடங்களில் போய் தங்கும்  நிலை போல ஏற்படும். 25 வயதில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இரண்டாம் இடத்தில் ராகு திசை ஆரம்பித்தால் திருமணம் நடைபெறுவதே ஒரு பெரிய கேள்விக்குறையாகிவிடும். அல்லது கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பது , அதாவது திருமணமாகிவிட்டாலும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம் ஆகிவிடும். ராசியில் இரண்டாம் வீட்டிலோ அல்லது லக்னத்தில் இரண்டாம் வீட்டிலோ இப்படி இருந்தால் ஏற்படலாம். 

சனி புத்தி என்பது திருமணம் ஆகி ஒரு இரண்டு மூன்று வருடத்தில் நடந்தால் அந்த குறிப்பிட்ட காலத்தில் ஒரு சில காரணங்களுக்காக மனைவியிடம் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பாடும், அல்லது பிரிந்து வாழும் படி ஏற்படும். அதே போல பத்து வருடம் கழித்து அது போல ஏற்பட்டால் அந்த தசாபுத்தி வருகிற பொழுது குடும்பத்தில் எல்லோரும் வேறொரு ஊரில் பிரிந்து இருப்பார். இந்த மாதிரி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது என்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்று இருப்பவர் பெரும்பாலும் மருத்துவர் துறையிலே இருப்பார்கள்

பொதுவாக இந்த தசாபுத்தி என்பது எந்த வயதில் அந்த ஜாதகருக்கு நடக்கிறதோ அப்போது அவர் யாருடன் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்கள் மாறுபடும். அதுபோல குறிப்பாக ராகு அல்லது சனி அமையப்பெற்று இருந்தால் பேச்சை குறைக்க வேண்டும்.  இரண்டில் ராகு, சனி இருந்தால் பேசுவது ஒரு பெரிய பிரச்சனையாகி விடும் அதனால் பேச்சை குறைப்பது நல்லது. அடுத்து ஒரு ஆண் ஜாதகருக்கு ராகு தசை அல்லது சனி தசை ஒரு இரண்டு வருடம் நடக்கிறது என்றால் அந்த இரண்டு வருடத்தில் எத்தனை முறை திருமணம் ஏற்பாடு நடந்தாலும் அது தடங்கல் கொடுக்கும். இப்படி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது இருந்து அதற்கான தசை நடக்கும்போது தேவையற்ற பேச்சை குறைத்துக் கொண்டாலே நல்லது.