Skip to main content

விழிக்கே அருளுண்டு! -பி. ராஜலக்ஷ்மி

Published on 03/04/2019 | Edited on 03/04/2019

இவ்வுலகிலுள்ள தாய்கள் தன் குழந்தைகளிடம் அன்பு காட்டுகிறார்கள்.

தன் குழந்தையின் நலன்வேண்டி பல தியாகங்கள் செய்கிறார்கள். உலக மாதாவான பராசக்தியோ உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளையும் தன் கடாட்சத்தினாலேயே ரட்சிக்கிறாள். தேவியின் கடாட்சத்தினால்தான் மும்மூர்த்திகளும் சக்தி பெற்றார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன. வாய் பேசமுடியாத மூககவி, கல்வி அறிவே இல்லாத காளிதாசர், காளமேகப் புலவர் போன்றோர் அம்பிகையின் கடாட்சத்தினாலேயே கவி பாடும் திறமை பெற்றார்கள்.

 

god



பரம பாகவதரான குசேலர் மிக வறுமையான நிலையில் இருக்கும்போது, மனைவி சுசீலையின் வேண்டுகோளைஎற்று பால்ய நண்பரான கிருஷ்ணனை தரிசிக்க துவாரகை சென்றார். கண்ணன் குசேலரைப் பார்த்ததும் ஆனந்தம் கொண்டு கட்டியணைத்து தன்னருகே அமர்த்தி உபசரித்தார்.

மகாலட்சுமியான ருக்மினி தேவியும் உடனிருந்து குசேலருக்கு அர்க்யம், பாத்யம் கொடுத்து விசிறிவிட்டாள். குசேலர் பிரமித்துப்போய் பேசமுடியாமல் பரவசமாகி லட்சுமிதேவியோடுகூடிய கிருஷ்ணனைக் கண்டு மெய்ம் மறந்த நிலையை அடைந்தார். கிருஷ்ணனும் குசேலருடைய வறுமையை நீக்கி ஐஸ்வர்யங்களை அளிக்கத் திருவுளம் கொண்டார். இருந்தாலும் அந்த சக்தி தேவிக்குதான் உண்டென்பதால், மகாலட்சுமியின் கடாட்சம் குசேலருக்குக் கிடைக்கவேண்டு மென்று நினைத்தார் பரந்தாமன். அடுத்த வினாடி தேவி கண்ணனைப் பார்த்து, ""சுவாமி, இந்த பிராமணர் எந்த திக்கிலிருந்து வருகிறார்?'' என்று வினவினாள். கண்ணபிரானும் இதுவே தருணமென்று, ""இதோ பார் தேவி... இந்த திக்கிலிருந்துதான்...'' என்றவுடன், கருணாசாகரியான மகாலட்சுமி அந்த திசையில் தன் அருட்பார்வையை வீசுகிறாள். அந்த நிமிடமே அஷ்ட ஐஸ்வர்யங்களும் ஓடிப்போய் குசேலருடைய இல்லத்தை நிரப்பிவிட்டன.

 

temple



இராமாயணத்தில், இராவணவதம் முடிந்தவுடன் ஸ்ரீராமபிரான் சீதாதேவியோடு அயோத்திக்குச் செல்ல ஆயத்தமாகிறார். அப்போது ஸ்ரீராமனின் முகம் வாடுகிறது. விபீஷண பட்டாபிஷேகம் எல்லாமே முடிந்த பிறகும் ராமனின் முகம் வாடி மனம் தடுமாறுகிறது. ஏனெனில் இராவண வதத்திற்குப் பின் இலங்கை நகரமானது ராஜ்யஸ்ரீயை இழந்து சோபையே இல்லாமல் காட்சியளிக்கிறது. அப்படிப்பட்ட இலங்கையை தன் பக்தனான விபீஷணனுக்கு அளிப்பதா என்றெண்ணி ராமன் வேதனைப்பட்டார். அடுத்த நிமிடம் தன் அருகிலிருந்த சீதா தேவியைப் பார்த்து, ""தேவீ, உனது நயனங்களால் கடாட்சித்து இலங்கைக்கு அருள்புரிய வேண்டும்'' என்கிறார். திருமகளான சீதாதேவி கருணையோடு இலங்கை நகரைக் கடாட்சிக்கிறாள். அந்த விநாடியே இலங்கை நகரம் பொலிவு பெற்று ராஜ்யஸ்ரீயுடன் பிராகசிக்கிறது.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷத்தால் அத்தனைப்பேர்களும் அவதிப்பட்டார்கள். பரமேஸ்வரன் எல்லாரையும் ரட்சிக்கும் பொருட்டு அந்த விஷத்தை அருந்தி நீலகண்டன் என்னும் திருநாமம் பெற்றார் என்பது யாவரும் அறிந்ததே. சங்கரனார் விஷத்தைக் கையில் ஏந்தியபொழுது அம்பிகையான பார்வதிதேவி தன் கடாட்சத்தினாலேயே நஞ்சை அமிர்தமாக்கிவிட்டாள். அமிர்தேஸ்வரி என்ற திருநாமம் கொண்டு அருள்பாலித்து வருகிறாள்.

வடமொழியில் "அக்ஷ' என்றால் கண்களைக் குறிக்கும். இதனாலேயே பராசக்தியான அன்னை காமாக்ஷி, மீனாக்ஷி, விசாலாக்ஷி என்றெல்லாம் நாமம் கொண்டு, பார்வை ஒன்றினாலேயே உலகத்தை ரட்சித்து வருகிறாள். காமாக்ஷி அன்னைக்கு கண்களை வைத்தே அந்த நாமம் ஏற்பட்டது. தேவி உபாசகரான ஸ்ரீமுத்துசுவாமி தீட்சிதர் தன் கிருதியில் "சாரதா ரமா நயனே' என்று, தேவியின் நயனங்களில் ரமையும், வாணியும் உள்ளார்கள் என்று பாடுகிறார்.

யுகம்யுகமாக துர்வாசர், தௌம்யர், தத்தாத்ரேயர், சுகர் போன்ற ஞானிகள் அம்பிகையின் அருள்பெற்று ஆத்மானுபவத்தைப் பெற்றார்கள். ஆதிசங்கரரும் அம்பிகையைப் பற்றி எண்ணற்ற துதிப்பாடல்களைப் பாடியருளினார். அவற்றுள் ஸ்தோத்ர சிகரமாகத் திகழும் "சௌந்தர்ய லஹரி' துதியில் தேவியின் கடாட்ச வைபவத்தைப் பற்றி பல பாடல்களில் வர்ணிக்கிறார்.

அதற்குப்பிறகு தோன்றிய ஸ்ரீமூககவி அம்பிகையை 500 பாடல்களில் தேன் சொட்ட வர்ணிக்கிறார். சோழ நாட்டில் தோன்றிய அபிராமி பட்டர், 69-ஆம் பாடலில் "தனம் தரும் கல்வி தரும்' என்று அவளின் கடைக்கண் அருளைப் போற்றுகிறார். அந்தாதியின் 79-ஆவது பாடலாகிய "விழிக்கே அருளுண்டு' என்ற பாடலைப் பாடி முடித்தவுடனே அபிராமியம்மை அவருக்குக் காட்சியளித்து அருளினாள்.

ஸ்ரீரங்கம் தலத்தில் பெருமாளுக்கு ஒரு நாள் தாயாரைப்போலவே மிகவும் நேர்த்தியாக அலங்கரிப்பார்கள். இதை அனுபவித்த ஆழ்வார், "பெருமாளே, நீ என்னதான் தாயார் வேடம் பூண்டாலும் தாயாருடைய நயனங்களிலுள்ள கருணையைக் காணமுடியவில்லையே' என்று பாடுகிறார்.

அம்பிகையின் கடாட்சம் கிடைத்தாலே நாம் உன்னதமாக இருப்போம். அம்பிகை தன் இயற்கையான கருணையைப் பொழிந்து அவளை உபாசிப்பவர்களது ஆத்மா பரமாத்மாவிலேயே கரைந்திருக்குமாறு அருள்கிறார். அன்னைக்கு உகந்த நவராத்திரி நன்னாளில் அன்னையை உபாசித்து அவளுடைய அருளைப் பெறுவோம்.

 

Next Story

மண வாழ்க்கை நிம்மதியாக இருக்க... - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 murugu-balamurugan-jothidam-3

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

திருமண வாழ்க்கை பற்றி பேசும்பொழுது பொதுவாக ஜோதிடம் என்பது ஒரு கடல். நிறைய கருத்துக்கள் இருந்தாலும் தற்காலத்திற்கு ஏற்றவாறு அன்றைய சூழ்நிலைக்கேற்றவாறு அனுபவ கருத்துதான் மிக மிக முக்கியம். புத்தகங்கள் இருந்தாலும் ஜோதிடர்கள் பல நேயர்களிடம் கேட்கக்கூடிய உரையாடலின் மூலமாக அவர்கள் சொல்லும் கருத்துக்கள் தான் மிக முக்கிய அனுபவம். அப்படி ஆண் பெண் ஜாதகம் எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால் மண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதிலும் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானம் திருமண வாழ்க்கை குறிக்கக்கூடிய ஸ்தானம் என்று சொல்லலாம். அது மட்டுமல்லாமல் இரண்டாம் வீடு என்பது குடும்ப ஒற்றுமையை குறிக்கக்கூடிய ஸ்தானம். எந்த ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்று நாலு ஏழு பத்தில் ஏழாம் அதிபதி அமைய பெறக்கூடிய ஜாதகமும் அதுபோல ஏழாம் அதிபதி ஒன்னு ஐந்து ஒன்பதில் அமையக்கூடிய ஜாதக நேயர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதுபோல இரண்டு ஏழு பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது ரொம்ப சிறப்பு. ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் என்பவர் களத்திரக்காரர் என்பர் அந்த களத்திரக்காரர் சுப கிரக சேர்க்கையோடு இருக்க வேண்டும்.

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் என்பவர் களத்திரக்காரர். அவர் சுப கிரக நட்சத்திரங்களோடு அமைவது, சுப கிரக சேர்க்கையோடு அமைவது மிக சிறப்பு. ஒரு ஆணின் ஜாதகத்தை எடுத்தாலும் சரி பெண்ணின் ஜாதகம் எடுத்தாலும் சரி இரண்டு, ஏழுக்கு அதிபதி பலமாக இருந்தால் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண காலத்தில் நடக்கக்கூடிய தசாபுத்திகள் சுபகிரக தசா புத்தியாக இருக்க வேண்டும். ஒரு நல்ல கிரகத்துடைய தசா புத்தி ஆக இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

நவக்கிரகங்களில் சுப கிரகம் என்பது குரு, சுக்கிரன் சுபசேர்க்கை பெற்ற புதன், வளர்பிறை சந்திரன் ஆகியவை சுப கிரகங்கள் ஆகும். அந்த சுப கிரகங்கள் ஏழில் அதிபதி அமைவதோ அல்லது ஏழாம் சேர்க்கை பெறுகிறதோ அடுத்த இரண்டாம் வீட்டிலோ அல்லது இரண்டாம் சேர்க்கை பெறுவதும், சுக்கிரன் எனும் சுப கிரக நட்சத்திரத்தில் அமைவதும், சுப கிரகங்களுடைய தசா புத்திகள் நடைபெற்றால் குறிப்பாக திருமண வயதில் அடுத்த 10 - 15 வருடங்களுக்கு நடக்கக்கூடிய அமைப்பு என்பது மன வாழ்க்கை ரீதியான பலனை ஏற்படுத்தக் கூடியது.

Next Story

உறவுகள் ஒற்றுமையாக இருக்க கிரகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
murugu-balamurugan-jothidam-2

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை நம்மோடு பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் பகிர்ந்து கொள்கிறார்.

ஜோதிடத்தில், குடும்ப ஒற்றுமை பற்றி அறிய இரண்டாம் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜோதிட ரீதியாக குடும்ப ஒற்றுமையை விளக்கக்கூடிய ஸ்தானமாக விளங்குவது ஜென்ம லக்னத்தில் இருந்து இரண்டாவது இடம். இது ஒரு பாலருக்கும் பொருந்தும்.  இரண்டாம் எண் என்பது குடும்ப ஒற்றுமை குறிப்பது.  இரண்டில் சுப கிரகங்கள் அமையப்பெற்றிருந்தால் அதாவது குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன், சுப சேர்க்கை பெற்றிருந்தால் குடும்ப ஒற்றுமை மிக மிக நன்றாக இருக்கும். 

அதுபோல குரு போன்ற கிரகங்கள் அதனுடைய பார்வை இரண்டாம் இடத்தில் இருந்தால் குடும்பத்தில் நல்லது.  பாவ கிரகங்கள் சனி ராகு கேதுவாக இருக்கிறார்கள். சூரியன், செவ்வாய் பாவகிரகங்கள் என்றால் அது பாதிப்பை கொடுப்பதில்லை. அதாவது  ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமைவது அவ்வளவு நன்றல்ல . லக்னத்தில் சந்திரனுக்கு இரண்டாம் வீட்டில் சனி, ராகு அமைவதும் அவ்வளவு நல்லஅமைப்பு என்று சொல்ல முடியாது. மேலும் அந்த சனியுடைய திசை இரண்டாம் வீட்டை நோக்கி வந்தாலும், இரண்டில் ராகு இருந்தாலும், ராகு திசை கடந்தாலும், அந்த ஜாதகருடைய குடும்பத்தில் ஒரு ஒற்றுமை குறைவு உண்டாக்கிவிடும். அதற்காக இரண்டாவது இடத்தில் சனி ராகு இருந்தால் முழுமையாக பாதிப்பென்று இல்லை. அதனுடைய திசை வரும் போது மட்டும் கொஞ்சம் பாதிப்பை உண்டாக்கலாம். குழந்தை பருவத்தில் இரண்டாம் வீட்டில் ராகு திசை நடக்கிறது என்றால் தந்தையோடு  இருக்க முடியாத நிலை உண்டாகும். ஒரு சில இடங்களில் தாத்தா பாட்டி அல்லது உறவினர்களுடன் வளரும் நிலை கூட உண்டாகிவிடும். 

அதேபோல இரண்டாம் வீட்டில்  சனி இருக்கும் பொழுது அந்த வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவது, வாக்குவாதங்கள் நடப்பது, நிம்மதி குறைவு, படிப்பு நிமித்தமாக அந்த ஜாதகர் வெளியிடங்களில் போய் தங்கும்  நிலை போல ஏற்படும். 25 வயதில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இரண்டாம் இடத்தில் ராகு திசை ஆரம்பித்தால் திருமணம் நடைபெறுவதே ஒரு பெரிய கேள்விக்குறையாகிவிடும். அல்லது கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பது , அதாவது திருமணமாகிவிட்டாலும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம் ஆகிவிடும். ராசியில் இரண்டாம் வீட்டிலோ அல்லது லக்னத்தில் இரண்டாம் வீட்டிலோ இப்படி இருந்தால் ஏற்படலாம். 

சனி புத்தி என்பது திருமணம் ஆகி ஒரு இரண்டு மூன்று வருடத்தில் நடந்தால் அந்த குறிப்பிட்ட காலத்தில் ஒரு சில காரணங்களுக்காக மனைவியிடம் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பாடும், அல்லது பிரிந்து வாழும் படி ஏற்படும். அதே போல பத்து வருடம் கழித்து அது போல ஏற்பட்டால் அந்த தசாபுத்தி வருகிற பொழுது குடும்பத்தில் எல்லோரும் வேறொரு ஊரில் பிரிந்து இருப்பார். இந்த மாதிரி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது என்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்று இருப்பவர் பெரும்பாலும் மருத்துவர் துறையிலே இருப்பார்கள்

பொதுவாக இந்த தசாபுத்தி என்பது எந்த வயதில் அந்த ஜாதகருக்கு நடக்கிறதோ அப்போது அவர் யாருடன் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்கள் மாறுபடும். அதுபோல குறிப்பாக ராகு அல்லது சனி அமையப்பெற்று இருந்தால் பேச்சை குறைக்க வேண்டும்.  இரண்டில் ராகு, சனி இருந்தால் பேசுவது ஒரு பெரிய பிரச்சனையாகி விடும் அதனால் பேச்சை குறைப்பது நல்லது. அடுத்து ஒரு ஆண் ஜாதகருக்கு ராகு தசை அல்லது சனி தசை ஒரு இரண்டு வருடம் நடக்கிறது என்றால் அந்த இரண்டு வருடத்தில் எத்தனை முறை திருமணம் ஏற்பாடு நடந்தாலும் அது தடங்கல் கொடுக்கும். இப்படி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது இருந்து அதற்கான தசை நடக்கும்போது தேவையற்ற பேச்சை குறைத்துக் கொண்டாலே நல்லது.