நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை- கும்பகோணம் பாதையில் திருவாவடுதுறை அமைந்துள்ளது. தேவாரப் பாடல்பெற்ற ஒப்பிலாமுலையம்மை சமேத கோமுக்தீஸ்வரர் திருக்கோவில் இங்குதான் அமைந்துள்ளது. தேவார மூவரான திருஞான சம்பந்தர், "காந்தார பஞ்சமம்" ராகத்தில் 11 பாடல்களையும், திருநாவுக்கரசர் "திருநேரிசை'யில் முதலில் 10 பாடல்களையும், பிறகு 10 பாடல்களையும், சுந்தரர் "தக்கேசி' ராகத்தில் 10 பாடல்களையும் பாடியுள்ளனர். இதுதவிர மாணிக்கவாசகர் உள்ளிட்ட சைவ சமயப் பெரியவர்கள் திருவாய் மலர்ந்தருளி பதிகங்களைப் பாடியுள்ளனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments