Skip to main content

உலகப் புகழ்பெறும் பெண்கள் யார்?

Published on 07/03/2019 | Edited on 07/03/2019

ஒரு பெண் உயர்ந்த பதவிக்கு வரவேண்டு மென்றால் அவளது ஜனன ஜாதகத்தில் லக்னாதி பதி லக்னத்தில் அல்லது 5-ல் அல்லது 9-ல் இருக்கவேண்டும். அதுவும் 2, 5, 9-ஆம் அதிபதி யுடன் இருந்தால், அவள் புகழுடன் வாழ்வாள்.லக்னாதிபதியும், 2-க்கு அதிபதியும் 5-ல் இருந்தால், அந்தப் பெண் பிறக்கும்போதே நல்ல வசதியுடன் பிறப்பாள். காலப்போக்கில் புகழுடன் இருப்பாள். லக்னாதிபதியும் 5-க்கு அதிபதியும் 9-ல் இருந்தால், அவள் தன் சுய முயற்சியால் பெரிய பதவியை அடைவாள். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னாதிபதியும் 9-க்கு அதிபதியும் 5, 11-ல் இருந்தால், அவள் புகழுடன் வாழ்வாள். அவளுடன் அதிர்ஷ்டம் எப்போதும் இருக்கும். 5-க்கு அதிபதி உச்சமாக இருந்தால், அவள் தன் 20 வயதிற்குப் பிறகு 60 வயதுவரை புகழுடன் நட்சத்திரத்தைப்போல மின்னுவாள். 5-க்கு அதிபதி லக்னாதிபதியுடன் லக்னத் தில் இருக்க அதை குரு பகவான் பார்த்தால், அந்தப் பெண் அரசியலில் ஈடுபடுவாள். அல்லது அரசாங்கத்தின் ஏதாவது துறையில் பெரிய பதவியில் இருப்பாள்.ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 5-ஆம் பாவத்தில் குரு, சூரியன், புதன் இருந்தால், அவள் அரசாங்கத்தின் பெரிய பதவியில் இருப்பாள். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற பதவிகளில்! அவளுக்கு 9-க்கும் 10-க்கும் உரிய கிரகங்களின் தசை நடக்கும் போது புகழுடன் விளங்குவாள்.ஜாதகத்தில் 2-ஆம் பாவத்தில் சனி பகவான் இருந்தால், அதுவும் சுய வீட்டிலோ உச்சமாகவோ இருந்து அதை குரு பகவான் பார்த்தால், அந்தப் பெண் உலக அளவில் புகழுடன் இருப்பாள்.
 

woman god

2-ல் சந்திரன், 3-ல் புதன்- சூரியன், 4-ல் சுக்கிரன் இருந்தால், அவள் ஏழைக்குடும்பத்தில் பிறந்தாலும், 25 வயதிற்குப் பிறகு புகழுடன் வாழ்வாள். தைரியம்கொண்ட பெண்ணாக பெரிய பதவியில் இருப்பாள். அதே ஜாதகத்தில் ராகு 11-ல் இருந்தால், அவள் ராஜயோகத்துடன் வாழ்வாள்.லக்னத்தில் சனி, 4-ல் சுக்கிரன்- குரு, 5-ல் சூரியன்- புதன் இருந்தால், சாதாரண குடும்பத்தில் பிறந்தவளாக இருந்தாலும், அவள் திருமணமான பிறகு புகழுடன் வாழ்வாள். ஜாதகத்தில் 5-க்கு அதிபதி லக்னத்தில் உச்சமாக இருந்து, அதே ஜாதகத்தில் 11-ல் ராகு, 10-ல் குரு இருந்தால் அவள் நல்ல பெயருடனும், மதிப்புடனும் வாழ்வாள். லக்னத்தில் புதன் உச்சமாக இருந்து, 3-ல் சனி, 10-ல் சுக்கிரன் இருந்தால், அவள் பல காரியங்களை மிகவும் தைரியமாக முடித்து, அனைவரின் பாராட்டுகளையும் பெறுவாள்.ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னாதிபதி லக்னத்தில் இருந்து, 6-ல் செவ்வாய், 10-ல் குரு இருந்தால், அவள் தன் செயல்களைத் துணிச்சலாகச் செய்வாள்.
 

hindu woman god

31 வயதிற்குப் பிறகு நல்ல பெயருடனும் புகழுடனும் வாழ்வாள்.10-க்குரிய கிரகம் லக்னத்தில் உச்சமாக இருந்து, 2-ஆம் வீட்டில் சுக்கிரன், 6-ல் சனி, 10-ல் குரு, 11-ல் சந்திரன் இருந்தால், அவள் தன் 30 வயதிற்குப் பிறகு ஆன்மிகம், ஜோதிடம் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க நபராக வருவாள். பேராசிரியையாக வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.லக்னத்தில் குரு, 9-ல் சுக்கிரன்- புதன், 10-ல் செவ்வாய் அல்லது சனி- செவ்வாய் இருந்தால், அப்பெண் தன் சுயமுயற்சியால் பெரிய தொழிலதிபராக வருவாள்.ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதியான சுக்கிரன் லக்னத்தில் இருந்து, அதே ஜாதகத்தில் 4-ல் செவ்வாய், குரு அல்லது சனி, குரு இருந்து, சூரியன் 5, 11-ல் இருந்தால், அந்தப்பெண் கடுமையாக உழைத்து, உயர்ந்த பதவியில் புகழுடன் இருப்பாள். அரசியலில் பெரிய பதவியை வகிப்பாள்.

Next Story

காதலிக்கு சரமாரி கத்திகுத்து; காதலன் வெறிச்செயல்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 lover stabbed his girlfriend who forced her to marry him

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வருபவர் ஆதித்யா சிங்(27). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவரும் இவர்' அதே பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அப்போது உடற்பயிற்சி கூடத்திற்கு இளம் பெண் ஒருவரும் வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆதித்யா சிங்கிற்கும் அந்தப் பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில், இந்தப் பழக்கம் காதலாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரும் அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆதித்யா சிங் அந்தப் பெண்ணுடன் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஆதித்யா சிங்கை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதனை ஆதித்சிங் மறுத்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று மறுபடியும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்தப் பெண் ஆதித்யா சிங்கிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் வழக்கம் போல மறுத்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்கு வாதம் முற்றிய நிலையில் ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணை ஆதித்யா சிங், கத்தியால் சரமாரியாக குத்தி உள்ளார். பின்பு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.

அப்போது, அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு உள்ளே வந்து பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில்  காதலிப்பதாக கூறி  ஏமாற்றியது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ஆதித்யா சிங்கை தேடி வருகின்றனர்.

Next Story

டிக்கெட் பரிசோதகர் கையைக் கடித்த பெண்; ஓடும் ரயிலில் பரபரப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Woman bites ticket inspector hand in moving train

ரயிலில் டிக்கெட் பரிசோதகரைக் கடித்த இளம்பெண்ணின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் இருந்து நேற்று முன் தினம் விரார் நோக்கி மின்சார ரயில் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அந்த ரயில் தகிசர் - மிரோரோடு இடையே சென்றுக்கொண்டிருந்தபோது, அதிரா(26)  என்ற பெண் டிக்கெட் பரிசோதகர் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில், ரயில் பெட்டியில் இருந்த சிங் என்ற பெண்ணிடம் டிக்கெட் பரிசோதனை செய்வதற்காக டிக்கெட் கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண், தனது கணவர் வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய டிக்கெட்டை காட்டியுள்ளார். ஆனால், இந்த டிக்கெட் செல்லாது என்று கூறிய பரிசோதகர் அதிரா, அடுத்து வரும் மிரா ரோடு ரயில் நிலையத்தில் இறங்குமாறு கூறியுள்ளார். இதனால்  இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பெண் பயணி மிராரோடு ரயில் நிலையம் வந்ததும், டிக்கெட் பரிசோதகர் அதிராவின் கையை கடித்துவிட்டு தப்பிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அதிரா கத்தி கூச்சலிட அக்கம்பக்கத்தில் இருந்த மற்ற பயணிகள் பெண் பயணியை பிடித்து ரயில்வே போலீஸிடம் ஒப்படைத்தனர். பாதிக்கப்பட்ட பரிசோதகருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பெண் பயணிமீது வழக்குப்பதிவு செய்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.