Skip to main content

இரவு வேளையில் வீட்டில் துணி துவைத்தால் நோய் வரும்!

Published on 07/03/2019 | Edited on 07/03/2019

மகிழ்வுடன் வாழவேண்டுமென்பதே அனைவரின் விருப்பமும். ஆனால் நாம் வசித்துக்கொண்டிருக்கும் வீட்டிலுள்ள சிறிய சிறிய தோஷங்கள்கூட மகிழ்ச்சியை இல்லாமல் செய்துவிடும்.ஒருவர் அடிக்கடி சீதளத் தொல்லைக்கு ஆளானால் அவர் வீட்டின் வடமேற்கில் படுக்கிறாரா என்று கவனிக்க வேண்டும். ஏனென்றால், வடமேற்கில் படுத்தால் உணவு ஜீரணமாகாது. அதனால் உடலில் கபம் பிடிக்கும்; சீதளம் வரும். அவர் வடமேற்கில் படுப்பதற்கு பதிலாக தென்மேற்கு அறையில், தெற்கில் தலைவைத்துப் படுத்தால் நோய் பாதிப்பிலிருந்து விடுபடுவதை அனுபவத்தில் உணரலாம்.வீட்டில் தூக்கம் சரியாக வரவில்லையென்றால், படுக்கையறையிலிருக்கும் தேவையற்ற பொருட்களை நீக்கிவிட வேண்டும். கட்டிலுக்கு அடியில் இரும்புப் பொருட்கள், செருப்புகள் ஆகியவை இருந்தால் சரியாகத் தூக்கம் வராது. மேற்கில் தலைவைத்துப் படுத்தாலும் சரியாகத் தூக்கம் வராது. கிழக்கில் அல்லது தெற்கில் தலைவைத்துப் படுத்தால் நன்கு தூக்கம் வரும். குழந்தைகளுக்கு உடல்நலக்குறை இருந்தால், அந்த வீட்டின் சமையல் மேடைக்குக் கீழே நீர்பிடித்து வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை கவனிக்கவேண்டும். அவ்வாறு இருந்தால் அடிக்கடி உடல்நலம் பாதிக்கும். எனவே சமையல் மேடைக்குக் கீழே நீர்பிடித்து வைப்பதைத் தவிர்க்கவேண்டும்

god

சிலருக்கு அடிக்கடி சிறுவிபத்துகள் நடக்கும். வீட்டின் தென்கிழக்கில் நீர்த்தொட்டி அல்லது கிணறு இருந்தால் இவ்வாறு ஏற்படும். வடகிழக்கில் நீர்பிடித்து வைக்க வேண்டும். நீர்த்தொட்டி இருக்கவேண்டும்.ஒரு குடும்பத்தில் சொத்துப்பிரச்சினைகள் இருந்தால், அந்த வீட்டின் மத்திய பகுதியில் கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு இருக்கிறது என்று அர்த்தம். அதை வடக்கிலோ வடகிழக்கிலோ மாற்றினால் சொத்துப் பிரச்சினைகள்இருக்காது.வீட்டின் தென்மேற்குப் பகுதியில் கிணறு இருந்து தெற்கு காலியாக இருந்தால், அந்த வீட்டிலிருக்கும் பெண்களுக்கு திடீரென்று நோய் வரும். அங்கிருக்கும் ஆண்மகன் குடும்பத்திலிருந்து வெளியேறிச் சென்றுவிடக்கூடும். வீட்டில் சந்தோஷம் இருக்காது. கிணறு வடக்கில் இருப்பதே நல்லது.வீட்டின் மத்தியில் சமையலறை இருந்தால், அந்த வீட்டிலிருக்கும் முதல் மருமகளுக்குப் பிரச்சினை உண்டாகும். சமையலறை தென்கிழக்கு அல்லது வடமேற்கில் இருந்தால் பிரச்சினைகள் நீங்கும்.படுக்கையறையின் தெற்கு திசையில் முகம் பார்க்கும் கண்ணாடி இருந்தால், அங்கு படுப்பவர்களுக்கு வாயுத்தொல்லை உண்டாகும். கண்ணாடியை வடகிழக்கில் மாற்றுவது நல்லது.பெருக்கும் துடைப்பத்தைச் செங்குத்தாக வைக்கக்கூடாது. வைத்தால் சண்டை உண்டாகும். அதை படுத்த நிலையில், யாருக்கும் தெரியாமல் மறைவாக வைக்கவேண்டும்.

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம்; பக்தர்கள் உற்சாகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Meenakshi - Sundareswarar Chariot; Devotees excited

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரை திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

மேலும், மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வுக்காக மதுரை வந்தடைந்தார். கள்ளழகர். உடன் பாரம்பரியமாக கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.