ADVERTISEMENT

'ஷியா முஸ்லிம்' என்பதால் கொலை செய்யப்பட்ட 6 வயது சிறுவன்...!

06:00 PM Feb 11, 2019 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சவுதியில் ஆறு வயது சிறுவன் ஷியா முஸ்லிம் என்பதால் தனது தாயின் முன் கொல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள், “சகாரியா அல் ஜாஃபர் எனும் ஆறு வயது சிறுவன் தனது தாயுடன் மெதினா புனிதத் தளத்திற்குச் செல்லும் வழியில், ஒரு கார் டிரைவர் நீங்கள் ஷியா முஸ்லிமா என்று கேட்டுள்ளார். அதற்கு சகாரியாவின் தாய் ஆம் என்று பதில் கூற, அந்த கார் டிரைவர் அந்த சிறுவன் வந்த டாக்ஸியின் கார் கண்ணாடியை உடைத்து, அதில் இருந்து ஒரு கண்ணாடி துண்டை கையில் எடுத்து, “நீ இஸ்லாமின் தவறான வேரிலிருந்து வந்தவன்” என்று கூறி சகாரியாவின் தொண்டையில் குத்திக் கொலை செய்துள்ளார். இதனைக் கண்ட சகாரியாவின் தாய் மயங்கி விழுந்துள்ளார்” என்று செய்திகள் வெளியாகியுள்ளது.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT