Skip to main content

சாதாரண விமானத்தில் பாகிஸ்தானுக்கு புறப்பட்ட இம்ரான்கான்!

Published on 29/09/2019 | Edited on 29/09/2019

ஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சவுதி அரேபிய அரசு வழங்கிய தனிவிமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், வேறு வழியின்றி மக்கள் பயணிக்கும் சாதாரண விமானத்தில் சவுதி அரேபியா புறப்பட்டார்.


அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் நியூயார்க் நகரில் இருந்து தனி விமானத்தில் மீண்டும் சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் நகருக்கு புறப்பட்டனர். ஆனால், விமானம் நடுவழியில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்து, மீண்டும் விமானம் நியூயார்க் நகருக்கு திருப்பி விடப்பட்டது.

PAKISTAN PRIME MINISTER USA TO SOUDI AREBIA NORMAL FLIGHT USED SPECIAL FILGHT MACHINE PROBLEM


நியூயார்க்கில் உள்ள ஜான் கென்னடி விமான நிலையத்தில் தரையிறங்கி சிறப்பு விமானத்தின் தொழில்நுட்பக் கோளாறுகளை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனிடையே பாகிஸ்தான் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஹோட்டலில் தங்கினர். பின்பு நீண்ட நேரமாகியும் விமான கோளாறு சரி செய்யப்படாததால், இதையடுத்து, நியூயார்க்கில் இருந்து சவுதி அரேபியாவின் ரியாத் நகர் செல்லும் சாதாரண விமானத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் செல்ல முடிவு செய்தார். அதை தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அதே விமானத்தில் பயணித்தனர். 




 

சார்ந்த செய்திகள்

Next Story

கையில் காசில்லை, பசி, பட்டினி; கதறும் மகன்; கண்ணீர் வடிக்கும் தாய்

Published on 06/12/2023 | Edited on 06/12/2023
ad

 

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம் தலைவன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னத்தாய். இவரது மகன் மணிபாலன். மின்னணு சாதனங்கள் நிபுணர் என்று வெளிநாட்டில் வேலை இருப்பதாகக் கூறி சேப்டி யூனியன் காண்ட்ராக்ட்டிங் கம்பெனி என்ற நிறுவனத்தின் மூலமாக சவுதி அரேபியாவிற்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் என்ன வேலை செய்தார் என்று தெரியவில்லை. அவரது விசா காலம் 15.10.2023 அன்றுடன் முடிந்துவிட்டது. ஆனால் அவர் வேலை பார்த்து வந்த நிறுவனம் அவரது விசாவை நீட்டிப்புச் செய்ய எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

 

இதனால் அவர் அங்கு வேறு இடத்தில் பணிக்கோ உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பெற வெளியில் கூட செல்ல முடியவில்லை. அவர் ஓரிடத்தில் முடங்கிக் கிடப்பதோடு அன்றாட உணவுக்கே கஷ்டப்பட்டும், கையில் பணமில்லாமல் மன உளைச்சல் ஏற்பட்டு கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்ததுபோல் தனித் தீவு ஒன்றில் புலம்பிக் கொண்டிருப்பதாகவும், அன்றாடம் நெருக்கடிகள், பசி, பட்டினியால் அழுது புலம்புவதாகத் தனது தாயிடம் செல்போனில் கதறி அழுதுள்ளார்.

 

மேலும், தன்னை எப்படியாவது தாய் நாட்டிற்கு அழைத்து வர ஏற்பாடு செய்யக் கேட்டு கண்ணீரும் கதறலுமாய் திரிவதை வீடியோவாகத் தனது தாய்க்கு அனுப்பியிருக்கிறார். இதனால் உறைந்து போனது மணிபாலனின் குடும்பம். தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்து மகனை எப்படியாவது இந்தியாவிற்கு மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீரும் கம்பலையுமாய் கதறியிருக்கிறார் தாய் அன்னத்தாய். தவிர வீடியோ ஒன்றில் வேதனையாக, முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார். நிலை குலைந்துபோயிருக்கிறது மணிபாலனின் குடும்பம்.

 

 

Next Story

முடிவுக்கு வந்த போர் நிறுத்தம்; மீண்டும் தொடங்கிய தாக்குதல்

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

The ceasefire ended; The attack resumed

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்தும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

 

இந்த நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த நவ. 29 ஆம் தேதி தொடங்கிய தற்காலிக போர் நிறுத்தம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது மீண்டும் போர் துவங்கியுள்ளது. போர் விமானங்கள் மூலம் காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக் குழுவின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தற்போது மீண்டும் காசா மீது தாக்குதலை தொடங்கியுள்ளது இஸ்ரேல்.