உலகம் முழுவதும் மது தயாரிக்கும் ஆலைகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அனைத்து ஆலைகளும் ஆண்டு முழுவதும் மது வகைகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டின் அதிக விலைக்கு விற்பனையான மது வகையாக எசென்சியா 2008 என்ற மது பாட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பாட்டில்களின் விலை தலா 2.5 லட்சம் என்று தெரியவந்துள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
கடந்த ஆண்டு இந்த வகையான மது பாட்டில்கள் மட்டும் 18 தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் 11 பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் மீதி பாட்டில்களை தற்போது விற்பனை செய்ய உள்ளதாக அதன் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த செய்தி நெட்டிசன்களின் கேலி கிண்டலுக்கு ஆளாகி வருகின்றது. இந்த பாட்டில்கள் 20 ஆண்டுகள் வரை கெடாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றாகும்.
Show comments