வடலூர் வள்ளலாரின் கொள்கைகளை மக்களுக்கு கொண்டு சென்று சேர்க்கும் வகையில்,சமரச சுத்த சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்ட மது, மாமிச எதிர்ப்பு பேரணி புதுச்சேரியில் நடைபெற்றது. தவத்திரு சிவராமனார் தலைமையில் நடைபெற்ற பேரணியில் 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு எழுச்சி முழக்கமிட்டனர்.

alcohol and meat protest rally

Advertisment

தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் சன்மார்க்க அன்பர்கள் குடும்பம் குடும்பமாக பேரணியில் கலந்து கொண்டனர். பேரணியின் நிறைவில் புதுவை கடற்கரை காந்தி சிலை எதிரில் சன்மார்க்க பக்தர்கள் அகவல் படித்து வழிபாடு நடத்தினர்.

Advertisment