கடந்த வருடம் இவருடைய ஐம்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக அந்த குறுகிய நாட்டின் பெயரை ஸ்வாசி லேண்ட் என்று மாற்றிக்கொண்டார். பின்னர் தனக்கு தானே ஒரு பிரைவேட் ஜெட்டை பரிசாக வழங்கிக்கொண்டார். ஏற்கனவே பல நூறு கோடி மதிப்பிலான பிரைவேட் ஜெட் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் திடீரென ஸ்வாடி அரசர் 19 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கியுள்ளார். அதில் தனது மனைவி 15 பேருக்கு பரிசாக கொடுத்திருக்கிறார். மேலும் 120 பி.எம்.டபுள்யு கார்களை தனது அணிவகுப்பிற்காக வாங்கியிருக்கிறார். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியிலும், பஞ்சம் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கும்போது தனது மனைவிகளுக்கு ரூ.175 கோடி மதிப்பில் கார்கள் வாங்கிக்கொடுக்கும் அரசர் என்று சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகின்றனர்.
முன்னதாக தனது 23 குழந்தைகளுக்கு பரிசாக தல ஒரு மெர்சிடஸ் கார் வாங்கிக்கொடுத்திருக்கிறார் இந்த ஏழை நாட்டின் பணக்கார அரசர்.