ஜப்பான் கட்டுப்பாடில் இருந்த குட்டி தீவை தற்போது காணவில்லை என்று அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளது. ஜப்பானின் வடக்கு கடலோர பகுதியுள்ள ஹோகிடோ என்ற தீவவு உள்ளது. இந்த தீவு அருகே உள்ள இசாமி ஹனகிட்டோ ஹோஜுமா என்ற ஒரு குட்டி தீவுதான் காணாமல் போய்விட்டதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜப்பான் கடலோர காவல்படை தெரிவித்துள்ள செய்தியில், ”கடந்த 1987 ஆம் ஆண்டில் இந்த குட்டி தீவு ஜப்பானுடன் இணைக்கப்பட்டது. கடல் மட்டத்தை விட 4.6 அடி உயரத்தில் இருந்தது. தற்போது அதை காணவில்லை” என்கிறது. இதனிடையே ஜப்பானில் ஏற்பட நிலநடுக்கத்தின் காரணமாக இந்த குட்டி தீவு கடலுக்குள் மூழ்கி இருக்கலாம் என்றும் சிலர் தெரிவிக்கின்றனர். வடிவேலு நகைச்சுவை ஒன்றில் இல்லாத கிணற்றை காணவில்லை என்று புகார் தெரிவிப்பார். ஆனால், இங்கோ ஜப்பான் உண்மையிலேயே இருந்த தீவு காணவில்லை என்று புகார் தெரிவித்துள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments