ADVERTISEMENT

இந்தோனோசியாவில் சுனாமியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 429-ஆக அதிகரிப்பு

11:58 AM Dec 26, 2018 | tarivazhagan


இந்தோனேசியாவின் கிரகடோவா எரிமலை கடந்த 23-ம் தேதி வெடித்துச் சிதறியது. இதனை தொடர்ந்து சுனாமி தாக்கியது. இந்த பேரிடரில் உயிரிழப்பு எண்ணிக்கை தற்போது 429 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

கிரகடோவா எரிமலை வெடிப்பை தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சுனாமியால் மேற்கு ஜாவா, தெற்கு சுமந்தரா தீவுப் பகுதிகளின் கடற்கரையை சுனாமி அலைகள் தாக்கியது. இதனால் கடற்கரையோரம் இருந்த ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் இடிந்து, இடிபாடுகளில் பலர் சிக்கிக்கொண்டனர். இதில், மூன்று தினங்களுக்கு முன் 168 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் வந்தது. இந்தநிலையில் தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 429-ஆக அதிகரித்துள்ளதாக பேரிடர் மேலாண்மை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுடோபோ புர்வோ நுக்ரோஹோ நேற்று தெரிவித்தார். மேலும் காயமடைந்த சுமார் 1,400 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றும் காணாமல்போன 128 பேரை தேடும் பணியும் தொடர்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT