Skip to main content

சும்மாவே உட்கார்ந்திருந்த இளைஞர்... யூ- ட்யூபில் வைரலான வீடியோ...

Published on 01/08/2020 | Edited on 01/08/2020

 

indonesian youth sitting ideal infront of camera for 2 hours

 

யூ- ட்யூபில் இளைஞர் ஒருவர் இரண்டு மணிநேரம் எந்த வேலையும் செய்யாமல் கேமரா முன்பு உட்கார்ந்திருக்கும் வீடியோ 1.9 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று வைரலாகி வருகிறது. 

 

இந்தோனேசியாவைச் சேர்ந்த முகமது திடிட் என்பவர் கடந்த ஜூலை 10 அன்று, 27,000 ஃபாலோவர்களைக் கொண்ட தனது யூ- ட்யூப் பக்கத்தில் வினோதமான வீடியோ ஒன்றைப் பதிவேற்றினார். இரண்டு மணிநேரம் ஓடக்கூடிய அந்த வீடியோவில் அவர் எந்த வேலையும் செய்யாமல், எதுவும் பேசாமல், இரண்டு மணி நேரமும் கேமராவையும், வீட்டுச் சுவரையும் பார்த்தபடியே அமர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி இதுவரை 1.9 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. மேலும், இந்த வீடியோவின் ஸ்க்ரீன்ஷாட்கள் தற்போது மீம்களாகவும் மாறி வருகின்றன. 

 

இந்த வீடியோ தொடர்பாக முகமது திடிட் தனது பதிவில், ‘இந்த வீடியோ எதற்காக உருவாக்கப்பட்டது என்பதை உங்களுக்குக் கூறுகிறேன். இந்தோனேசிய இளைஞர்களுக்குப் பாடம் கற்பிக்கும் வகையிலான வீடியோவை வெளியிடுமாறு பலரும் என்னிடம் கூறினர். அதனால் கனத்த இதயத்துடன் இந்த வீடியோ எடுத்தேன். இதில் என்ன நன்மை என்று நீங்கள் கேட்டால் அது பார்வையாளர்களான உங்களைப் பொறுத்தது" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்; வைரலாகும் வீடியோ

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Attack on students engaged in prayer; A viral video

அண்மையில் டெல்லியில் சாலையில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை போலீஸ் அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு கொடூர தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கண்டனத்தை பெற்று வருகிறது. குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Next Story

கொட்டைப் பாக்கு கடத்தல்;ஒருவர் கைது

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

thoothukudi incident; import export

 

தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த கண்டெய்னர்கள் பெட்டியைப் பறிமுதல் செய்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் சோதனை நடத்தினர். அதில் 'பஞ்சு கந்தல்' என்ற பெயரில் மோசடியாக ஆவணங்கள் தயாரித்து கப்பல் மூலமாக இந்தோனேசியாவிலிருந்து கொட்டைப் பாக்கு கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

 

இந்த சம்பவத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஷிப்பிங் நிறுவன உரிமையாளர் ரவி பகதூர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தோனேசியாவின் ஜகார்த் துறைமுகம் வழியாக தூத்துக்குடி துறைமுகத்திற்கு கண்டெய்னர் பெட்டிகள் வந்து இறங்கியது. அப்போது நடத்தப்பட்ட சோதனையில் கொட்டைப் பாக்கு கடத்தப்பட்டது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட 65 டன் கொட்டைப் பாக்குகளின் மதிப்பு 4 கோடி ரூபாய் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடத்தலுக்கு சுங்க இலாகா அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில் அது குறித்தும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.