ADVERTISEMENT

மாங்காய் சாப்பிட விடுதியின் சுற்றுச்சுவரை உடைத்த யானை!

07:35 AM Jan 14, 2020 | suthakar@nakkh…

மாங்காய் சாப்பிடுவதற்காக யானை சுவர் ஏறி தாண்டி சென்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சாம்பியா நாட்டில் எம்புவே என்ற இடத்தில் புகழ்பெற்ற தேசிய பூங்கா உள்ளது. இதன் அருகில் சொகுசு விடுதி ஒன்று செயல்பட்டு வருகின்றது. பூங்காவில் இருந்து யானைகள் அடிக்கடி சொகுசு விடுக்கு வருவது வாடிக்கையான ஒன்று.


ADVERTISEMENT


அந்த வகையில் நேற்று யானை ஒன்று விடுதியின் சுற்றுச்சுவரை உடைத்துவிட்டு, 3 அடிக்கு மேல் இருந்த அந்த உடைந்த சுவரை தாண்டி அங்கிருந்த மாங்காய் மரத்தில் இருந்த பழங்களை சாப்பிட்டுள்ளது. இது அனைத்து அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. யானைக்கும் திருட்டு மாங்காய்தான் இனிக்கும் போல என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.

ADVERTISEMENT


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT