Skip to main content

காட்டு யானையிடம் சேட்டை... இளைஞரை தெறிக்கவிட்ட யானை!

Published on 02/01/2020 | Edited on 03/01/2020


காட்டு யானை ஒன்றிடம் வம்பு செய்த இளைஞரை யானை ஒன்று துரத்திய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஒடிசா மாநிலத்தில் மயூர்பஞ்ச் என்ற இடத்தில் உள்ள விவசாய பகுதிகளில் அடிக்கடி காட்டு யானைகளின் நடமாட்டம் இருக்கும். இந்த யானைகள் அங்குள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகின்றது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வந்தனர். 
 

jk



இந்நிலையில் நேற்று அந்த பகுதிக்கு வந்த காட்டு யானை ஒன்று பயிர்களை சாப்பிட்டு கொண்டிருந்துள்ளது. அப்போது இளைஞர் ஒருவர் அதன் பின்பகுதியில் குச்சியை கொண்டு அடித்துள்ளார். இதனால் கோபம் கொண்ட அந்த யானை அந்த இளைஞரை நிலப்பகுதியை சுத்தி சுத்தி வந்து துரத்தியது. இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.

 

சார்ந்த செய்திகள்