ADVERTISEMENT
ஈக்வடாரில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.
ADVERTISEMENT
தெற்கு அம்பாடோ நகரத்திலிருந்து சுமார் 94 கி.மீ. தொலைவில் 112 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் குவைட்டோவில் உள்ள மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். இதேபோல் அங்கு கடந்த 2016 -ஆம் ஆண்டு ஈக்வடார் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் 7.8 என்ற ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தினால் 700-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். ஆனால் தற்போது நேற்று திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை.
Show comments