ADVERTISEMENT
ADVERTISEMENT
சாலையின் தடுப்பு சுவரில் பேருந்து மோதிய விபத்தில் மூன்று சிறுவர்கள் உள்பட 17 பேர் காயமடைந்துள்ளனர்.
பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது. அப்போது, பின்னால் வந்த இருசக்கர வாகனம் பேருந்து மீது மோதியது. மேலும், அவ்வழியாக சென்ற வாகனங்களும் விபத்தில் சிக்கின. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், சாலையின் நடுவே நீளவாக்கில் இருந்த சுவரைப் பேரு ந்து ஓட்டுநர் கவனிக்கத் தவறியதே விபத்துக்கான காரணமாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ADVERTISEMENT
Show comments