ADVERTISEMENT

இலங்கை தேவாலயங்களில் குண்டுவெடிப்பு... உதவி எண்களை அறிவித்தது இந்திய தூதரகம்

11:50 AM Apr 21, 2019 | tarivazhagan

இலங்கையில் கொழும்பு பகுதியில் அமைந்துள்ள கொச்சிக்கடை கிறிஸ்தவ ஆலயத்திலும், நீர்கொழும்புவில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திலும் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

மொத்தம் கொழும்புவில் 6 இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் இதுவரை 25-க்கும் மேற்பட்டோர் பலி என முதற்கட்ட தகவலில் தெரியவந்தது. அதேபோல் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் எனத் தெரியவந்தது. தற்போது பலி எண்ணிக்கை 52-ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 280-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இலன்கையில் உள்ள இந்தியர்களின் நிலைமையை குறித்து அறிந்துக்கொள்ள - 947779-03082, 94112-422788, 94112-422789 ஆகிய உதவி எண்களில் உதவிக்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT