ADVERTISEMENT
ADVERTISEMENT
புல்வாமா தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக இந்தியா நேற்று பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தது. அதனை தொடர்ந்து நேற்று முழுவதும் இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதியில் பதட்டம் நிலவியது. தமிழகத்தை சேர்ந்த இந்திய வான்படை பைலட் அபிநந்தன் பாகிஸ்தானில் ராணுவத்தால் பிடிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அமெரிக்கா இந்த விவகாரம் பற்றி கூறுகையில், "எல்லை தாண்டிய ராணுவ தாக்குதலை இந்தியா மற்றும் பாகிஸ்தான் நிறுத்த வேண்டும். நேரடி பேச்சுவார்த்தை மூலம், இருநாடுகளும் சுமூக முடிவுக்காண வேண்டும்; ராணுவ நடவடிக்கைகள் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும். தீவிரவாதிகளுக்கு புகலிடம் வழங்க கூடாது, அவர்களுக்கு நிதியுதவி கிடைப்பதை தடை செய்ய வேண்டும் என பாகிஸ்தான் அரசை வலியுறுத்துவோம்" என கூறியுள்ளது.
Show comments