ADVERTISEMENT
இன்று (21.10.2021) சென்னை மாநகராட்சி மண்டலம் 8 அண்ணா நகர் பகுதிக்கு உட்பட்ட புரசைவாக்கம் பகுதியில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கும் பணி நடைபெற்றது.
ADVERTISEMENT
75 கடைகளுக்கு மேல் ஆய்வு செய்யப்பட்டு, 150க்கும் மேற்பட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மண்டல நல அலுவலர் பிரியதர்ஷினி தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில் துப்பரவு அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட குழு உடனிருந்தனர்.
Show comments