Skip to main content

வேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...!!  

Published on 06/07/2020 | Edited on 06/07/2020
Mutton hall chennai

 

 

சென்னை பெரம்பூரில் மாநகராட்சி ஆட்டிறைச்சிக் கூடம் கரோனா தொற்று காரணமாக, 100 நாட்களையும் தாண்டி திறக்கப்படாததால், இந்த இறைச்சி கூடத்தை நம்பி உள்ள ஆயிரக்கணக்கானவர்கள் நூறு நாட்களையும் தாண்டி ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிறார்கள், பல நாட்கள் பட்டினிக் கிடக்கிறார்கள் என்கின்றனர் அங்குள்ள வியாபாரிகள்.

 

சென்னை ஆட்டிறைச்சி மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சபீர் அகமது மற்றும் செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோரை சந்தித்தோம். 

 

அவர்கள் நம்மிடம், “கரோனா தொற்று பரவக்கூடாது என்பதற்காக மார்ச் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் ஊரடங்கு நடத்தினார்கள், அன்று விடுமுறை அளித்தோம். மார்ச் 25ல் இருந்து ஏப்ரல் 14 வரை ஊரடங்கு. அந்த நேரத்தில் இறைச்சி கூடத்தை மூடச் சொல்லி எங்களை கேட்கவில்லை, நாங்களாக முன் வந்து 15 நாட்கள் இறைச்சிக் கூடத்தை மூடினோம். அதற்கு பிறகு ஏப்ரல் 26ஆம் தேதியில் இருந்து இன்று வரை திறக்கவில்லை. கரோனா தொற்று பரவக்கூடாது என்பதற்காக ஊரடங்கு தொடங்கும்போது, நாங்களாகவே 15 நாட்கள் கடைகளை மூடி வைத்திருந்தோம். தொடர் ஊரடங்கால் 100 நாட்களையும் தாண்டி கடைகள் மூடப்பட்டுள்ளது. 

 

ஆட்டிறைச்சிக் கடைகளில் 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். மாட்டிறைச்சி கூடங்களில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். மேலும் இந்த இறைச்சி கடைகளை நம்பி ரிக்க்ஷா ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், சுமை தூக்குபவர்கள், வெளியூரில் இருந்து ஆடு கொண்டுவருபவர்கள் உள்ளனர். இது இல்லாமல் 3,242 ஆட்டிரைச்சி கடைகளுக்கு சென்னை மாநகராட்சி லைசென்ஸ் கொடுத்துள்ளது. இதில் 90 சதவீத இறைச்சி கடைகளுக்கு இங்கிருந்துதான் இறைச்சி செல்கிறது. மாட்டிறைச்சியை பொறுத்தவரை நூறு சதவீதம் இங்கிருந்துதான் செல்கிறது. சைதாப்பேட்டை போன்ற இடங்களில் 40, 50 ஆடுகள் அறுக்கும் கூடங்கள் உள்ளன. அது அந்தந்த பகுதிகளுக்கு தேவைக்கு பயன்படும். ஆயிரக்கணக்கான ஆடுகளை அறுக்க வேண்டுமென்றால் இங்குதான் வர வேண்டும். அந்த அளவுக்கு வசதிகளும், தொழிலாளர்களும் உள்ள இடம் இது. 

 

தினந்தோறும் அதிகாலை மூன்றரை மணிக்கு வரும் தொழிலாளர்கள், வேலை முடிந்துதான் செல்வார்கள். அனைவரும் தினக்கூலித் தொழிலாளர்கள். இந்த தொழிலாளர்கள் அனைவரும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள். 

 

ஆயிரக்கணக்கான தொழிலாளர்களையும், வியாபாரிகளையும், சில்லரை வியாபாரிகளையும் காப்பாற்ற உடனடியாக இந்த இறைச்சி கூடங்களை திறக்க அனுமதிக்க வேண்டும். எங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். 

 

 

chennai

 

கரோனா காலத்தில் அதற்கான வழிமுறைகள் என்னென்ன என்று சொல்லுங்கள், அதனை நாங்கள் பின்பற்றுகிறோம். முக கவசம் அணிவது, கையுறை அணிவது, மாநகராட்சி என்னென்ன சொல்கிறதோ அதனை முழுமையாக கடைப்பிடிக்கிறோம் என நாங்கள் எழுத்துப்பூர்வமாக மனு கொடுத்துவிட்டோம். 

 

மண்டல அலுவலகத்திற்கு போனால், 'எங்களுக்கு அதிகாரம் இல்லை' என்கிறார்கள். மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு சென்றால் 'உங்கள் மனுவை மேலிடத்திற்கு அனுப்பியிருக்கிறோம், அதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லை' என்கிறார்கள். இந்த இறைச்சி கூடத்திற்கு பொறுப்பாக இருக்கக்கூடிய விஓ,  'எங்களுக்கு அதிகாரம் இல்லை, கமிஷ்னர் தான் ஆர்டர் போடணும்' என்கிறார்கள். 

 

 

chennai

                                  ஆட்டிறைச்சி மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சபீர் அகமது

 

கமிஷ்னர் அலுவலகத்திற்கும் சென்றோம். அங்கும் பேச்சுவார்த்தை நடத்தினோம். இங்குள்ள கடைகளை இரண்டு பகுதியாக பிரித்து, பாதி வியாபாரிகளையும், பாதி தொழிலளார்களை ஒரு நாள் வேலை செய்ய விடுவது, மறுநாள் அந்த கடைகளுக்கும் தொழிலாளர்களுக்கும் விடுமுறைவிட செய்து, மீதி பாதி வியாபாரிகளையும், பாதி தொழிலளார்களை அடுத்த நாளில் பணி செய்ய விடலாம், இதுபோன்ற சுழற்றி முறையில் செய்தால் கூட்டத்தை கட்டுப்படுத்தலாம், அதிக கூட்டம் கூடாது என்றோம். 

 

நாங்களே முன்வந்து இன்னொன்றும் சொன்னோம். ஞாயிற்றுக்கிழமைதான் எங்களுக்கு வியாபாரமே. அந்த ஞாயிற்றுக்கிழமைகளில் நாங்கள் விடுமுறை விட்டுவிடுகிறோம் என்று சொன்னோம். அரசு கடந்த ஒரு மாதமாகத்தான் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என சொல்கிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் நாங்கள் கடைகளை மூடுகிறோம் என கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே ஆணையர், இணை ஆணையர் அவர்களுக்கு எழுத்துப்பூர்வமாக மனுவாக கொடுத்திருக்கிறோம். 

 

mmmm

 

இது இல்லாமல் நாங்களே ஒரு குழு அமைத்திருக்கிறோம். அந்த குழுவினர், கடைக்கு வருபவர்கள் மற்றும் கடையில் உள்ளவர்களை சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, மாஸ்க் அணிவது, கையுறை அணிவதை கடைப்பிடிக்கிறார்களா, கடைப்பிடிக்கவில்லை என்றால் கடைப்பிடிக்க அவர்கள் அறிவுறுத்துவார்கள் என்பதையும் எழுத்துப்பூர்வமாக மனுவாக கொடுத்திருக்கிறோம். அதிகாரிகள் எதற்கும் பதில் அளிக்கவில்லை. 

 

கடைசியாக பேச்சுவார்த்தையில் இறைச்சிக் கூடத்திற்கு பொறுப்பாக இருக்கக்கூடிய விஓ, பாதி கடைகளை திறந்து, பாதி தொழிலாளர்களை வைத்து இறைச்சி கூடத்தை நடத்தலாம் என்றார். அதற்கும் நாங்கள் ஒப்புக்கொண்டோம். 

 

மாநகராட்சி ஆணையரை நாங்கள் நான்கு முறை சந்திக்க சென்றோம். ஒவ்வொரு முறையும் இரண்டு மணி நேரம், இரண்டு மணி நேரம் என உட்கார்ந்து காத்திருந்தோம். விசிட்டிங் கார்டு வாங்கிக்கொள்கிறார்களேயொழிய மாநகராட்சி ஆணையரை சந்திக்க முடியவில்லை. எங்களை சந்திக்காமல் நிராகரித்துவிட்டார். என்ன காரணத்திற்காக சந்திக்காமல் நிராகரிக்கிறார் என தெரியவில்லை. ஒரு நிமிஷம் எங்களை சந்தித்து, என்ன காரணத்திற்காக இறைச்சிக் கூடம் திறக்கவில்லை. எப்போது திறப்போம், என்ன திட்டம், யோசனை ஏதாவது தெரிவிக்கலாம். எந்த பதிலும் அளிக்கவில்லை. எந்த அறிக்கையும் அளிக்கவில்லை. இதுதான் எங்களுக்கு மிகப்பெரிய வருத்தமாக இருக்கிறது.

 

118 ஆண்டுகள் பழமை வாய்ந்த இறைச்சிக் கூடம் ஆங்கிலேயர் காலத்தில் பெரம்பூரில் 1903ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த இறைச்சிக்கூடத்தில் தலைமுறை தலைமுறையாக பணியாற்றி வருகிறார்கள். இந்த இறைச்சிக் கூடத்தை நம்பி உள்ள ஆயிரக்கணக்கானவர்கள், நூறு நாட்களையும் தாண்டி ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிறார்கள். பட்டிணிக் கிடக்கிறார்கள். அத்தனைப் பேரும் அன்றாடம் சம்பாதித்து சாப்பிடக்கூடிய தொழிலாளர்கள். சில்லரை வியாபாரியும் தினக்கூலித் தொழிலாளர்களைப் போலத்தான். 

 

இன்று காலை தொழிலாளர்கள், வியாபாரிகள் எல்லாம் ஒன்று கூடி எங்களுக்கு ஏதாவது பதில் சொல்லுங்கள் என்றோம். இந்த ஏரியாவின் இந்த ஜோனல் எக்ஸ்கியூடிவ் இன்ஜினீயர், புளியந்தோப்பு காவல் ஆய்வாளர், துணை ஆய்வாளர் வந்திருந்தார்கள். மாலைக்குள் அதிகாரிகளுடன் பேசி முடிவை சொல்கிறோம். கலைந்து செல்லுங்கள் என கேட்டுக்கொண்டார்கள். நாங்களும் கலைந்து சென்றோம். நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம்'' என்றனர் நம்பிக்கையுடன். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திக் திக் நொடிகள்... சென்னையை கலங்கடித்த சம்பவம்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Tick-tick seconds... a child saved by tact

சென்னை ஆவடியில் நான்காவது மாடியில் இருந்து கீழே தவறிவிழ முற்பட்ட நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை ஆவடி பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன்-ரம்யா தம்பதிக்கு 7 மாத குழந்தை உள்ளது. இன்று காலை குழந்தையின் தாய் ரம்யா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது கை தவறி குழந்தை நான்காவது மாடியில் இருந்து இரண்டாவது தளத்தில் உள்ள வெளிப்புற கூரை மீது விழுந்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டனர். கீழே பெட்ஷீட் போன்றவை விரிக்கப்பட்டு குழந்தை விழுந்தால் பிடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திக் திக் நொடிகளை கடந்து அந்த பகுதியை சேர்ந்த ஹரி என்ற இளைஞர் ஒருவர் சாதுர்யமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டார். காப்பாற்றப்பட்ட குழந்தையானது உடனடியாக ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.