ADVERTISEMENT
ADVERTISEMENT
சிதம்பரத்திலிருந்து டி.என்.32. என். 3921 எண் கொண்ட அரசு பஸ் கடலூர் நோக்கிச் சென்றது. புதுச்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, வில்லியநல்லூரிலிருந்து புதுச்சத்திரம் வந்த டி.என். 91. டி. 7270 எண் கொண்ட டெம்போ மீது எதிர்பாராமல் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சின்னாண்டி குழியைச் சேர்ந்த டெம்போ டிரைவர் ஜெயபால் மகன் பிரவீன் (25) சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
Show comments