Skip to main content

“வீடுகள் இல்லாதவர்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டிகொடுக்கப்படும்..” அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

Published on 27/12/2021 | Edited on 28/12/2021

 

"Apartment houses will be built for the homeless ..." Minister MRK Paneer Selvam

 

சிதம்பரத்தில் தமிழக முதல்வரின் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது.  முகாமிற்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி அனைவரையும் வரவேற்றார். இதில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் அதை உடனடியாக நடவடிக்கை எடுக்க ஒப்படைத்தார்.

 

இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “தமிழக முதல்வர் மீது நம்பிக்கை வைத்து பொதுமக்கள் பல ஆயிரக்கணக்கான மனுக்களை அளித்து வருகிறார்கள். தமிழக முதல்வர், மக்களின் குறைகளை நிறைவேற்றுவார். அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 19,116 மனுக்களை பெற்றார். அவர் முதலமைச்சராக பதவியேற்ற ஒரு மாதத்தில் 8 ஆயிரத்து 953 மனுக்களுக்கு ரூ. 41 கோடியில் திட்டங்களையும் நிறைவேற்றி எதிர்க்கட்சிகள், ஓட்டு போடாதவர்களின் பாராட்டை பெற்றார்.

 

சட்டமன்றத்தில் பட்ஜெட்டை வரவேற்று அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் முதல்வருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இந்த நல்லாட்சி நடைபெறுவதற்கு அரசு அதிகாரிகளின் கூட்டு முயற்சிதான் காரணம். கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம் ஆகிய 4  இடத்தில் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

கடலூர், சிதம்பரம் முக்கிய நகரமாகும் அதனால் கடலூரை மாநகராட்சி ஆகவும், சிதம்பரத்தை பெருநகராட்சி ஆகவும் அரசு அறிவித்துள்ளது. கூடுதல் நிதியை பெற்று மேம்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். சிதம்பரம் நகரத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பில் இருந்தவர்களை கடந்த ஆட்சி காலத்தில் மாற்று இடம் கொடுக்காமல் அகற்றிவிட்டனர். எனவே வீடுகள் இல்லாதவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலமாக அடுக்குமாடி வீடுகள் கண்டிப்பாக கட்டித் தருவோம். தற்போது இடம் தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

 

வரும் தேர்தலில் பொதுமக்கள் நமக்கு யார் நல்லது செய்வார்கள் என்பதை அறிந்து தேர்வு செய்யவேண்டும். கடலூர் மாவட்டம் 5 ஆறுகளின் வடிகாலக உள்ளதால் இயற்கை சீற்றத்தால் ஆண்டுதோறும் பாதிக்கப்படுகிறது. இதனால் விவசாயிகளும் பாதிப்படைகிறார்கள். முதல்வரின் முயற்சியால் நிரந்தர தீர்வு ஏற்படுத்துவதற்கு குழு அமைக்கப்படும்.

 

சிதம்பரம் தொகுதியில் 1991-ல் போட்டியிட்டு குறைந்தவாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தேன். இந்த தொகுதி மக்கள் என்னை கழிட்டி விட்டுவிட்டார்கள் அதன்பிறகு 96-ல் கலைஞர் குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார். தொகுதி மக்கள் என்னை கெட்டியாக பிடித்துகொண்டனர். அதிலிருந்து அந்த தொகுதி மக்கள் என்னை விடவில்லை. தொகுதியின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.  சிதம்பரம் தொகுதி அதிக மக்கள் கூடும் ஒரு சுற்றுலா தளம். இதனை புதுமை நகரமாக மாற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்றார். 

 

இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ஆனந்த், நகராட்சி ஆணையர் அஜிதாபர்வின், திமுக நகர செயலாளர் செந்தில்குமார், துணைச்செயலாளர் பாலசுப்ரமணியன், மாவட்ட நிர்வாகிகள் ஜேம்ஸ் விஜயராகவன், அப்பு சந்திரசேகர் உள்ளிட்ட திமுகவினர் கலந்துகொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.

Next Story

“காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தியா நிலைகுலைந்து போனது” - நிர்மலா சீதாராமன்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Nirmala Sitharaman said It was under Congress rule that India became unstable

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், மாநில தலைவர்கள் முதல் தேசிய தலைவர்கள் வரை அனைவரும் தமிழ்நாட்டைச் சுற்றி சுழன்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிதம்பரம் தொகுதி பாஜக வேட்பாளர், கார்தியாயினிக்கு ஆதரவாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், “சிதம்பரத்தில் பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு நான் பெருமையாக கருதுகிறேன்.  தமிழ்நாட்டுக்கு பல திட்டங்களை கொண்டு வந்தவர் மோடி. பிரதான் மந்திரி கரி கல்யாணம் அன்னை யோஜனா திட்டத்தில் 80 கோடி மக்களுக்கு 2020ல் இருந்து இன்று வரைக்கும், இலவசமாக தனிநபர் ஒருவருக்கு 5  கிலோ வீதம் அரிசி வழங்கி வருகிறார். அதேபோல் கோதுமை, வழங்கும் திட்டம் செயல்படுகிறது.

விவசாயிகள் நலன் கருதி பீயன்கிசான் சமான்  யோஜனா, திட்டத்தின் கீழ் உங்களுடைய அக்கவுண்டில் ரூ.6,000 வருஷத்துக்கு வருகிறது. விவசாயப் பொருள்களுக்கு டபுள் மடங்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 11 மெடிக்கல் காலேஜ் திறந்து வைத்தார் மோடி, அதில் ஒன்று அரியலூரில் உள்ளது. இதைத் தவிர நேஷனல் ஹைவே விரிவாக்குதல் செய்வதற்கும் நல்ல சாலையாக போடுவதற்கும் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. 60 கிலோ மீட்டர் ரோடுக்கு மீன்சுருட்டி நேஷனல் ஹைவேக்கு  ரூ.1025  கோடி ரூபாய் ரோடு போடுவதற்கு கொடுக்கப்பட்டுள்ளது. புதுச்சத்திரம் ரயில்வே நிலையம் புதுமையாக்கப்படுவதற்கு வேண்டுமென்ற திட்டம் போட்டு உள்ளார்கள். அரியலூர், சிதம்பரம்  ஸ்டேஷன் இவற்றை எல்லாவற்றிற்கும் அமர்த்பாரத் ஸ்டேஷன் ஸ்கீம் மூலமாக புதுப்பிக்கப்படும். மீனவர்கள் அதிகமாக உள்ள ஏரியா இது, விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு இதை வைத்து பேங்கில் விவசாயிகள் கடன் வாங்க முடியும், அதற்கு அரசு மூலம் மானியம் கொடுக்கப்படுகிறது. இதனால் குறைந்த வட்டியில் அவர்களுக்கு கடன் கிடைக்கிறது.

சிதம்பரம் பகுதியில் கிசான் கிரெடிட் கார்டு அனைத்து மீனவர்களுக்கும் கிடைப்பதற்கு கணக்கு எடுக்கப்படும். முந்திரி தொழில் ஈடுபடும் பெண்களுக்கு சுய உதவிக் குழு மூலமாக. அவர்களை கூட்டமைத்து அவற்றை சுத்திகரிப்பு செய்து  வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடியும், அண்ணாமலை பல்கலைக்கழகமும் அங்குள்ள மருத்துவமனையும் அரசு கட்டுப்பாட்டில் எடுத்த பிறகு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

திமுக, காங்கிரஸ் கட்சி மற்றும் தோழமைக் கட்சியில் ஆட்சியில் இருக்கும் போது தமிழ்நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகளில் ஊழல் காரணமாக இந்திய நாடு நிலை குலைந்து போனது, நாட்டின் தரவரிசை பட்டியலில் இந்தியா 5 ரேங்க் பட்டியலில் சென்று விட்டது. இது மோடி ஆட்சியில் சரி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2020ல் கொரோனா தொற்று நோய் வந்ததும் உலகமே நடுங்கியது. அந்தச் சமயத்திலும் நாட்டை முன்னேற்றத்துக்கு கொண்டு வந்தவர் மோடி

மோடி வந்தால், கோ பேக் மோடி என்று தமிழ்நாட்டில் குரல் கொடுத்து வருகிறார்கள். அண்ணாமலை ஐபிஎஸ் படித்துவிட்டு அரசியலுக்கு வந்தவரை ஜோக்கர் என்று ஏளனமாக பேசுகிறார்கள், ஆனால்  அவர் மக்களுக்கு சேவை செய்து வருகிறார்” என்று பேசினார்.