திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சான்றோர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் இளைஞர் ஜெகன். இவர் அதே பகுதியில் உள்ள இளம்பெண் ஒருவரை கல்லூரியில் படிக்கும்போது இருந்தே ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இதனை அறிந்த ஜெகன் அந்த பெண்ணிடம் தனது காதலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் காதலை அந்த பெண் ஏற்க மறுத்துள்ளதாக தெரிகிறது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இதுக்குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் வாணியம்பாடி காவல்துறையினர் ஜெகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் முதல் கட்டமாக, அந்த இளம் பெண்ணின் மீது ஒருதலைக்காதல் இருந்தது என தெரியவந்துள்ளது. நண்பர்கள் தந்த ஆலோசனைப்படியே பேருந்தில் தாலி கட்டியதாக கூறியுள்ளான். அதைத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Show comments