Today's corona situation in Tamil Nadu!

தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது1,630லிருந்து குறைந்து 1,624ஆகப் பதிவாகியுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விடச் சற்று குறைவு. கடந்த நான்கு நாட்களாக அதிகரித்து வந்த ஒருநாள் தொற்று இன்று குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,51,678 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இன்று 189 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 184என்று இருந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. அதேபோல் நேற்று கோவையில் 183 ஆக இருந்த பாதிப்பு இன்று 181ஆகக் குறைந்துள்ளது.

Advertisment

இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் ஒரேநாளில்24 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 35,550 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 18 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 17,192 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 1,639 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 26,09,435 பேர் மொத்தமாகக் குணமடைந்துள்ளனர். கோவை-181, ஈரோடு-116, செங்கல்பட்டு-115, திருவள்ளூர்-72, தஞ்சை-78, சேலம்-62, திருச்சி-58, திருவாரூர்-62, திருப்பூர்-89,நாமக்கல்-52 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.