ADVERTISEMENT

சென்னை வந்தார் யஷ்வந்த் சின்ஹா! 

02:49 PM Jun 30, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தி.மு.க., காங்கிரஸ்,திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவரின் தேர்தலுக்காக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹா, டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று (30/06/2022) காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.

அதைத் தொடர்ந்து, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று (30/06/2022) மாலை 05.00 மணிக்கு கலைஞர் அரங்கில் தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பூங்கொத்து மற்றும் பொன்னாடைப் போர்த்தி ஆதரவு கோரும் யஷ்வந்த் சின்ஹா, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து குடியரசுத் தேர்தலில் தனக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்கிறார்.

பின்னர், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து ஆதரவு கோருகிறார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT